செய்திகள்

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி வலிமையாக இருக்க வேண்டும்

முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு புதுடெல்லி, மே.12- பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியாவின் பதிலடி மிகவும் வலிமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நீடிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா-?பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை […]

Loading

செய்திகள்

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கை

திருச்சி, மே 2 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:– தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் […]

Loading

செய்திகள்

காவல்துறையின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையால்

சென்னையில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளது சென்னை, ஏப். 28– சென்னை பெருநகரில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை

சென்னை, ஏப். 25– தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 27-ந்தேதி வரை மட்டுமே பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள விசா செல்லு படி […]

Loading

செய்திகள்

பயங்கரவாத முகாம்களை அழிக்க உறுதியான நடவடிக்கை:

அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல் புதுடெல்லி, ஏப்.25- பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்கள், பயங்கரவாத முகாம்களை அழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொண்டனர். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கி இருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டம் […]

Loading

செய்திகள்

மலைகிராமங்களில் நகர் பகுதிக்கு இணையாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை: வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தகவல்

வேலூர், ஏப்.17-– மலை கிராமங்களில் நகர் பகுதிக்கு இணையாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவில் நேற்று கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். ஜார்தான்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தபுதூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் மூலம் சார்பில் ரூ.33 லட்சத்தில் 600 மீட்டர் தூரம் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை, கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவி பறிப்பு; பகுஜன் சமாஜ் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆம்ஸ்டாராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் மாநில ஒருங்கிணைப்பாளர் […]

Loading

செய்திகள்

ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை சென்னை, டிச.16– ‘ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில், ஆண்டுக்கு, 40 சதவீதம் பேர், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இது, 2015–ல் இருந்து கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் […]

Loading

செய்திகள்

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை

சென்னை, நவ. 6 காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: காணாமல் போனவர்கள் குறித்து புகார் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் காணாமல் போன நபர்கள் அடிக்கடி சென்று வரும் இடங்கள் பேருந்து […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது

சென்னை, நவ.2- தமிழக சட்டசபை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29-ந் தேதி வரை 9 நாட்கள் […]

Loading