செய்திகள் முழு தகவல்

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 1– ராஜ்யசபை தேர்தலுக்கு அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அண்ணா தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடரும். 2026–ம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபை சீட் வழங்கப்படும் என்றும் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ”அண்ணா தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.6.2025 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், […]

Loading

செய்திகள்

2026–ம் ஆண்டு தேர்தலில் 7வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சி தான்:

முதல்வர் ஸ்டாலின் உறுதி சென்னை, ஏப்.29– இதுவரை தமிழ்நாட்டில் செயல்படுத்தி இருக்கும் திட்டங்களால், செய்திருக்கக்கூடிய சாதனைகளால் வரும் 2026–ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் 7வது முறையாக தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொற்காலம் விரைவில் தொடங்கப் போகிறது என்றும் முதல்வர் பெருமிதத்துடன் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை கொன்றுவிடும்: ஸ்டாலின் ‘டுவிட்’

சென்னை, டிச.16– ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும். இந்த திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:– இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும். அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை […]

Loading

செய்திகள்

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை, டிச.13- மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை, மாநிலங்களின் குரலை அழித்து விடும்; கூட்டாட்சியியலைச் சிதைத்துவிடும்; அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையை […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல்: 45 வேட்பாளர்களை அறிவித்த சிவசேனா

மும்பை, அக். 23– மகாராஷ்டிராவில் 45 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை சிவசேனா வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாணேயில் உள்ள கோப்ரி–பஞ்ச்பகாதி தொகுதியில் போட்டியிடுகிறார். 288 சட்டமன்ற தொகுதிகளை மகாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணியில், பா.ஜ.க.–சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் முதல் கட்டமாக 45 பேர் கொண்ட […]

Loading

செய்திகள்

ஜம்மு-–காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஸ்ரீநகர், செப். 25– ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். காலை 9 மணி நிலவரப்படி 10.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு–-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18-ம் […]

Loading

செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி: அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி

2ம் சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை துவங்கியது முன்னாள் அரசியல் தலைவர்கள் வெளிநாடு தப்பியோட்டம் கொழும்பு, செப். 22– இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா திசநாயகே, சஜித் பிரேமதாசா இடையே இழுபறி ஏற்பட்டு உள்ளது. இதனால் 2–ம் சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை துவங்கி உள்ளது. இலங்கையின் 9வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திசநாயக்க, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், நமல் ராஜபக்ச உள்ளிட்டோர் […]

Loading