செய்திகள்

தென்கொரியாவில் கட்டுக்கடங்காத தீ: 27 பேர் பலி

சியோல், மார்ச் 28– தென் கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சான்சியாங்க் பிராந்தியத்தின் காடுகளில் கடந்த வாரம் தீ பற்றியது. அங்கு நிலவும் வறண்ட வானிலை காரணமாகவும் காற்றின் வேகத்தாலும் தீ மளமளவென பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 88,960 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்து போயுள்ளன. 27 பேர் […]

Loading

செய்திகள்

தென்கொரிய அதிபரைத் தொடர்ந்து இடைக்கால அதிபரும் பதவி நீக்கம்

சியோல், டிச. 28– தென்கொரியாவின் அதிபரைத் தொடர்ந்து, இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்ட ஹான் டக்- சூவும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கொரியாவில் கடந்த 3-ஆம் தேதி அதிபர் யூன் சுக்-இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்பட்டுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களின் கடும் எதிர்ப்பாலும் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தனர். ஆளுங்கட்சி புறக்கணிப்பு அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகளின் போராட்டம்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம் வாபஸ்

சியோல், டிச. 4– தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார். 50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 […]

Loading

செய்திகள்

தென்கொரியா பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு இலக்கியத்துக்கான 2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.11- தென்கொரியா பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 7–ந்தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளரான ஹான் காங்குக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. கவித்துவமான மொழி மற்றும் தீவிர உரைநடையில் வரலாற்று துயரையும், மனித வாழ்க்கையின் பலவீனங்களையும் வெளிப்படுத்தும் அவரது எழுத்துக்காக […]

Loading