சியோல், மார்ச் 28– தென் கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சான்சியாங்க் பிராந்தியத்தின் காடுகளில் கடந்த வாரம் தீ பற்றியது. அங்கு நிலவும் வறண்ட வானிலை காரணமாகவும் காற்றின் வேகத்தாலும் தீ மளமளவென பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 88,960 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்து போயுள்ளன. 27 பேர் […]