தென்காசி, ஏப். 7– தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் முடிந்து, இன்று விழா விமரிசையாக தொடங்கியது. கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் முன்னிலையில் யாக சாலை பூஜை நடைபெற்று வந்தன. கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக பல திருப்பணிகள் செய்யப்பட்டன. […]