செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

தூத்துக்குடி, மார்ச் 16-தூத்துக்குடி, அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மொத்தமாக 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென்று நேற்று நள்ளிரவு ஒன்று மற்றும் இரண்டாவது அலகில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் இருந்த மின் வயர்கள் எரிந்து நாசமாகின. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து […]

Loading

செய்திகள்

பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது

தூத்துக்குடி, மார்ச் 10– தூத்துக்குடியில் பஸ்சில் சென்று கொண்டிருந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் தங்க கணேஷ். இவரது மகன் தேவேந்திரன் (வயது 17). இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் இன்று பள்ளிக்குச் செல்வதற்காக தேவேந்திரன் பஸ்சில் ஏறி […]

Loading

செய்திகள்

பெங்களூரு – தூத்துக்குடி இடையே பொங்கலை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள்

சென்னை, ஜன. 07– பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கலை முன்னிட்டு பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க, பல முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தற்போது பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு […]

Loading

செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் உள்ள படிப்பக வளாகம்: ஸ்டாலின் பார்வையிட்டார்

தூத்துக்குடி, டிச. 30– தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாளை-ரோடு தமிழ்ச்சாலை பகுதியிலுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படிப்பக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு தமிழ்ச்சாலை பகுதியில் அமைந்துள்ள பூங்காவில், டி.என்.பி.எஸ்.சி., வங்கி, இரயில்வே போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இயற்கை சூழலில் அமர்ந்து படிக்கும் வகையிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், நாளிதழ்கள், இருக்கை வசதி, மின் வசதி, Wi-Fi, […]

Loading

செய்திகள்

தூத்துக்குடியில் ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்: 4வது நாளாக போக்குவரத்துக்கு தடை

தூத்துக்குடி, டிச. 16– தூத்துக்குடி ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் காரணமாக தேசமடைந்திருப்பதால் 4வது நாளாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 13-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஏரல் தாமிரபரணி ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் ஏரல்–குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆழ்வார்தோப்பு பாலம், ஸ்ரீவைகுண்டம் பாலம் வழியாக போக்குவரத்து […]

Loading

செய்திகள்

தூத்துக்குடி அருகே கடலில் குளித்த 2 பெண்கள் அலையில் சிக்கி பலி

தூத்துக்குடி, அக். 18– தூத்துக்குடி அருகே பெரியசாமிபுரம் கடலில் இன்று காலையில் குளித்துக் கொண்டிருந்த 5 பெண்களில், 2 பெண்கள் கடல் அலையில் சிக்கி பலியான நிலையில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மதுரை ஜி. ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் சாமி கும்பிடுவதற்காக கடந்த 15 ந் தேதி சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலையில் வேம்பார் பெரியசாமிபுரம் கடலில் அவர்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கடல் உள்கட்டமைப்பின் சக்தி

தலையங்கம் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த முனையம், ‘இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்’ என அவர் பாராட்டினார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் திறனை மேம்படுத்தும் பணிகளில் இந்திய அரசு எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளை அவர் விளக்கினார். 14 மீட்டருக்கும் அதிகமான ஆழத்திலும் 300 மீட்டருக்கும் மேலான நீளத்திலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சரக்குப் பெட்டக […]

Loading