செய்திகள்

துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 16– துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:– ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.6.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் […]

Loading

செய்திகள்

தி.மு.க. இளைஞரணியின் ஏவல்துறையான காவல்துறை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

கவுன்சிலர் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? சென்னை, மே 27– தி.மு.க. இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தி.மு.க. கவுன்சிலர் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் தி.மு.க. கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் அரக்கோணம் […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்டில் நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட 2 பேர் சுட்டுக்கொலை

ராஞ்சி, மே 24– ஜார்க்கண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லதேஹர் மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். […]

Loading

செய்திகள்

எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை

அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி பூஞ்ச், ஏப். 28– ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் (4வது நாளாக) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு […]

Loading

செய்திகள்

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர், ஏப் 24– பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘‘பயங்கரவாதிகளுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

நியூயார்க், ஏப். 18– புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவின் டல்லாஹஸ்ஸியில் உள்ள புளோரிடா […]

Loading

செய்திகள்

துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு 30–ந் தேதி வரை நீதிமன்ற காவல்

ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் வார்டில் சிகிச்சை சென்னை, ஜன. 17– துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து பொதுவார்டில் உள்ள பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுகிறார். சென்னை புளியந்​தோப்பு வெங்​கடேசபுரம் பகுதியைச் சேர்ந்​தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). கொலை முயற்சிகளின் போது நாட்டு […]

Loading