செய்திகள்

ஐதராபாத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

மேலும் 5 பேர் கவலைக்கிடம் ஐதராபாத், மே 18– ஐதராபாத் மாநிலத்தில் உள்ள மீர்சௌக் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 17 ஆக அதிகரித்துள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 குழந்தைகள், 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 17 பேர் இன்று காலை வரையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே மூன்று பேர் […]

Loading

செய்திகள்

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து

ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி கான்பூர், மே 5– உத்தரப்பிரதேசத்தில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள சமான்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தின், முதல் 2 தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை […]

Loading

செய்திகள்

கோல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து:

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி கோல்கட்டா, ஏப்.30 கோல்கட்டாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் […]

Loading

செய்திகள்

காங்கோ தீ விபத்து: படகு எரிந்து 50 பேர் பலி

கின்சாசா: காங்கோவில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 50 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். இந்நிலையில், வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர் பள்ளி தீ விபத்தில் உயிர்தப்பிய மகன், திருப்பதியில் பவன் கல்யாணின் மனைவி மொட்டை அடித்து வேண்டுதல்

திருமலை, ஏப். 14– சிங்கப்பூர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவு செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஸ்னேவா. இவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர். 2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஐதராபாத்தில் தான் […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் படுகாயம்

சிங்கப்பூர், ஏப். 8– சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர் ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண். இவரது இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ […]

Loading

செய்திகள்

குவைத் தீ விபத்தில் மூச்சுத்திணறலால் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

ஸ்டாலின் உத்தரவு சென்னை, ஜன. 26– குவைத் நாட்டில் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்கனி என்பவரின் மகன் முகமது யாசின் மற்றும் அப்துல் கலாம் என்பவரின் மகன் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த […]

Loading

செய்திகள்

துருக்கி தீ விபத்து: 66 பேர் பலி

இஸ்தான்புல், ஜன. 22– துருக்கியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற பனிச்சறுக்கு விடுதியின் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 66 பேர் பலியாகி உள்ளனர். வடமேற்கு துருக்கியின் பிரபலமான இடமான கர்தல்காயா பனிச்சறுக்கு ரிசார்ட்டில் 2 வார பள்ளி விடுமுறையை கொண்டாட ஏராளமானோர் குவிந்துள்ளனர். போலு மாகாணத்தில் உள்ள கர்தல்காயாவில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ரிசார்ட்டில் 12 மாடிகளை கொண்ட இந்த பனிச்சறுக்கு விடுதி உள்ளது. விடுமுறையை முன்னிட்டு அப்பகுதியில் இருந்த அனைத்து ஓட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. […]

Loading

செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

ரூ. 15 லட்சம் மின்சார வாகனங்கள் எரிந்து நாசம் விருதுநகர், டிச. 17– விருதுநகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் . அவர் அந்த பகுதியில் வாகன விற்பனை நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது . உடனே அக்கம் பக்கத்தில் […]

Loading

செய்திகள்

எண்ணூரில் தீ விபத்து: 4 குடிசை வீடுகள் எரிந்தன

சென்னை, நவ. 1– எண்ணூர் காமராஜர் நகரில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்த நாசமாயின. எண்ணூர் மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சாகுல் ஹமீதுக்கு காமராஜர் நகர் பகுதியில் சொந்தமான வீட்டின் மொட்டை மாடியில் குடிசை வீடுகளை அமைத்து, அவரது சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். நேற்று அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராத விதமாக குடிசை மீது தீப்பொறிபட்டுள்ளது.இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எண்ணூர் […]

Loading