செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு, ஜன. 21– ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ந் தேதி தொடங்கி 17ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் ரூ.7,126 கோடி மதிப்பிலான 7,387 ஏக்கர் கோவில் சொத்து மீட்பு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் சென்னை, ஜன. 5– தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 7,387 ஏக்கர் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று ஆணையர் அலுவலகத்தில், 38 மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் தனி வட்டாட்சியர்களின் (ஆலய நிர்வாகம்) சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தனி வட்டாட்சியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட நில மீட்பு மற்றும் நில அளவை பணிகள் குறித்தும், தனி […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது

சென்னை, நவ.2- தமிழக சட்டசபை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29-ந் தேதி வரை 9 நாட்கள் […]

Loading

செய்திகள்

‘நானே நேரில் சந்திக்க வருகிறேன்: என்னை சந்திக்க சென்னை வர வேண்டாம்’

தி.மு.க.வினருக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் சென்னை, அக்.1- என்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம். நானே நேரில் சந்திக்க வருகிறேன் என்று தி.மு.க.வினருக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் சென்னைக்கு வருகிறார்கள். அவர் வசித்து வரும் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே துணை முதலமைச்சர் உதயநிதி […]

Loading

செய்திகள்

கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

நினைவிடத்தில் மலர் அஞ்சலி சென்னை, ஆக. 7– முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை இருந்தவரும், தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவருமான மு.கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா […]

Loading

செய்திகள்

திருமாவளவனுக்கு மேலும் ஒரு பிடிவாரண்ட்: அரியலூர் கோர்ட் உத்தரவு

தி.மு.க. எம்.எல்.ஏ. சின்னதுரைக்கும் பிடிவாரண்ட் அரியலூர், ஆக. 2– மயிலாடுதுறை கோர்ட் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மற்றொரு வழக்கில் அரியலூர் கோர்ட் தொல்.திருமாவளவன் எம்.பி.க்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடந்தது. இதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்கவில்லை காஞ்சீபுரம், ஜூலை 29- காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி காஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் பதவி வகித்து வருகின்றனர். தி.மு.க. மேயர் பதவியேற்ற சில மாதங்களிலேயே அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்கொடி தூக்கினர். கடந்த சில மாதங்களாக […]

Loading

செய்திகள்

குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது

அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, ஜூலை 15– குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:– மாயாவதியோ, ஆம்ஸ்ட்ராங்கோ எங்களுக்கு தோழமை தான். வேண்டாதவர்கள் அல்ல. உண்மையான குற்றவாளிகளைத் தான் போலீசார் பிடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடும் போது குற்றவாளிகளை சுட்டுத்தான் பிடிக்க வேண்டியுள்ளது. அவசியமின்றி சுட வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.வினர் […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்னியூர் சிவா

சென்னை, ஜூலை 14– விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10–-ந் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தி.மு.க.வைச் சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: ஜூலை 10 வாக்குப்பதிவு

விழுப்புரம், ஜூலை8- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. எனவே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மற்றும் அக்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க. வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. […]

Loading