செய்திகள்

‘கவுரவம் பார்க்க வேண்டாம்; பங்கேற்க மறுக்கும் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

நம் உரிமையை மீட்க வாருங்கள் நாகை, மார்ச். 3– ‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில் கவுரவம் பார்க்காதீர்கள். தமிழகத்தின் பிரச்சனை, நம் உரிமைகள் பறிபோகும் பிரச்சனையை அரசியலாகப் பார்க்காமல் வாருங்கள்’’ என்று கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று சொல்லி இருக்கும் சில கட்சிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க நாகை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தி.மு.க., நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் […]

Loading

செய்திகள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்பனை

சென்னை,பிப்.6– ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களில் இருந்தோ இந்த மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா? “போலீசுக்கு பணம் […]

Loading

செய்திகள்

கல்வி, மாநில உரிமையை காக்க டெல்லியில் எம்.பி.க்களுடன் சேர்ந்து தி.மு.க. மாணவரணி போராட்டம்

சென்னை, ஜன.26- கல்வி, மாநில உரிமையை காக்க டெல்லியில் எம்.பி.க்களுடன் சேர்ந்து தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழகத்தில் 7-வது முறையாக ஆட்சி அமைத்து ஏற்றம் காண்போம் என்றும் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.க. மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதன்படி சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு, ஜன. 21– ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ந் தேதி தொடங்கி 17ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் ரூ.7,126 கோடி மதிப்பிலான 7,387 ஏக்கர் கோவில் சொத்து மீட்பு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் சென்னை, ஜன. 5– தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 7,387 ஏக்கர் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று ஆணையர் அலுவலகத்தில், 38 மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் தனி வட்டாட்சியர்களின் (ஆலய நிர்வாகம்) சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தனி வட்டாட்சியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட நில மீட்பு மற்றும் நில அளவை பணிகள் குறித்தும், தனி […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது

சென்னை, நவ.2- தமிழக சட்டசபை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29-ந் தேதி வரை 9 நாட்கள் […]

Loading

செய்திகள்

‘நானே நேரில் சந்திக்க வருகிறேன்: என்னை சந்திக்க சென்னை வர வேண்டாம்’

தி.மு.க.வினருக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் சென்னை, அக்.1- என்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம். நானே நேரில் சந்திக்க வருகிறேன் என்று தி.மு.க.வினருக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் சென்னைக்கு வருகிறார்கள். அவர் வசித்து வரும் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே துணை முதலமைச்சர் உதயநிதி […]

Loading