செய்திகள்

விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல்

திருவனந்தபுரம், ஜூன்.10- உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி., இரினா, கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தடைந்தது. அந்த கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் சர்வதேச விழிஞ்ஞம் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் கடந்த மே மாதம் 2-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. துறைமுக வளாகத்தில் நடந்த பிரமாண்டமான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த துறைமுக பணி ஆரம்பிக்கப்பட்டபோது கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை சமாளித்த […]

Loading

செய்திகள்

பிரதிஷ்டை நாள்: இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம், ஜூன் 4– கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடை இன்று மாலை திறக்கப்பட்டு நாளை இரவு 10.30 க்கு முடப்பட உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர, மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் […]

Loading

செய்திகள்

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

திருவனந்தபுரம்,மே 26– கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு இன்றும் அதி கனமழைக்கான சிவப்பு (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய […]

Loading

செய்திகள்

கேரளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை : சுற்றுலா தலங்கள் மூடல்

திருவனந்தபுரம், மே 24– கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 2 நாட்களாக அரபிக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Loading

செய்திகள்

மகளை ஆற்றில் வீசி கொன்ற கேரள தாய் கைது

திருவனந்தபுரம், மே 23– கேரளாவில் 4 வயது மகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே திருவாணியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுபாஷ்-சந்தியா தம்பதியினர். இவர்களது மகள் கல்யாணி (வயது 4). இந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சந்தியா சம்பவத்தன்று கணவர் வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடியில் இருந்து மகள் கல்யாணியை அழைத்து சென்று ஆற்றில் […]

Loading

செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

திருவனந்தபுரம், மே 14– சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கற்பூர ஆழியில் தீ ஐயப்பன் கோயிலில் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவ் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி […]

Loading

செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் போர்ப்பதற்றம் எதிரொலி: ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகை ரத்து

திருவனந்தபுரம், மே.10- வைகாசி மாத பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 19-ந் தேதி சபரிமலைக்கு வர இருப்பதாக கேரள உள்துறைக்கு கடந்த 6-ந் தேதி தகவல் வந்தது. அவர் பம்பையில் இருந்து இருமுடி கட்டி பாதயாத்திரையாக சன்னிதானம் செல்வதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வந்தது. ஜனாதிபதியின் வருகையையொட்டி சபரிமலையில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

திருவனந்தபுரம், மே 2– கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரூ.8,867 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த துறைமுகம் கேரளத்துக்கும் நாட்டுக்கும் பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் மோடி உறுதிப்பட கூறினார். விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கான முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை கேரள அரசு செலவிட்டுள்ளது. துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து மோடி பேசியதாவது:– விழிஞ்சம் துறைமுகம் காரணமாக கடல்சார் வர்த்தகத்தில் கேரளம் முக்கிய இடத்தைப் பெறும் என […]

Loading

செய்திகள்

சட்டவிரோத பண மோசடி : கேரள முதல்வர் மகள் மீது மோசடி வழக்கு;

திருவனந்தபுரம், ஏப் 4– ‘கொச்சி மினரல்ஸ்’ வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன். இவரது தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயனின் மகள் வீணா. இவர், பெங்களூரை தலைமையிடமாக வைத்து, ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் தகவல் […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் அல்ல; அதிதீவிர பாதிப்புதான்: மத்திய அரசு தகவல்

திருவனந்தபுரம், டிச. 31– வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்து கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு, ரூ. 2,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு […]

Loading