திருவண்ணாமலை, ஏப். 20– திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மாற்றத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக அவர்களின் நலனை காத்து உரிமை நிலை நாட்டும் அரசாக தமிழ்நாடு அரசு […]