செய்திகள்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை, ஏப். 20– திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மாற்றத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக அவர்களின் நலனை காத்து உரிமை நிலை நாட்டும் அரசாக தமிழ்நாடு அரசு […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 6 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் திருவண்ணாமலை, பிப்.16– திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை மூலமாக 6 இடங்களில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: திருவண்ணாமலை என்பது ஆன்மீக தளமாகும். அருணாச்சலேசுவரர் திருக்கோயிலை சுற்றியுள்ள கிரிவலப்பாதையின் மொத்தம் நீளம் 14 கி.மீட்டர் ஆகும். கிரிவலப்பாதையில் மாதந்தோறும் 20 முதல் 25 இலட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு ஏறக்குறைய […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் நிறைவு

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை, டிச.23–- திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தையொட்டி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவதால் அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. விழாவின் நிறைவாக, கடந்த 13–ம் […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை கோயிலில் தீபத்திருவிழா உண்டியல் காணிக்கை: ரூ.2.83 கோடி வசூல்

திருவண்ணாமலை, டிச.22– திருவண்ணாமலை கோயிலில் தீபத்திருவிழா உண்டியல் எண்ணிக்கையில் ரூ.2 கோடியே 83 லட்சத்து 92 ஆயிரத்து 520யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி உண்டியல் காணகாணிக்கை கடந்த 28–ம் தேதி எண்ணப்பட்டது. இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4–ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. 45 லட்சத்துக்கும் மேற்பட்ட […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் மாலையில் மலை உச்சியில் மகாதீபம்; பொதுமக்கள் மலைஏற தடை திருவண்ணாமலை,டிச. 13– திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக ஜோதி வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்: மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை

அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு சென்னை, டிச. 11– திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார். திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 4–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகா தேரோட்டம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை மகா தீபம் 13–ந் தேதி ஏற்றப்படுகிறது. வழக்கமாக திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

தீபத் திருவிழாவுக்கு மக்களுக்கு அனுமதியா? சேகர்பாபு பதில்

40 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு –––––– திருவண்ணாமலை மகாதீபத் திருவிழா: இந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்படும்; முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு –––––––––––––––––––––––– சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் ––––––––––– திருவண்ணாமலை, டிச. 10– திருவண்ணாமலை மகாதீபத் திருவிழா இந்தாண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். இந்தாண்டு திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: இன்று கொடியேற்றத்துன் தொடக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. […]

Loading

செய்திகள்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம்

விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட 8 மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள்: ஸ்டாலின் அறிவிப்பு * பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் * எருது, பசுக்களுக்கு ரூ.37,500 * சேதமடைந்த குடிசைகளுக்கு புதிய வீடுகள் சென்னை, டிச.3– மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட 8 மாவட்டங்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத்தொடங்கிய பெஞ்சல் புயலின் […]

Loading

செய்திகள்

பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணி: தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு

புதுடெல்லி, டிச. 3– பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலானது கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் […]

Loading