செய்திகள்

நானே ஆட்சியில் இருந்தாலும் கூட சாதிய வன்முறையை தடுக்க முடியாது: திருமாவளவன்

சென்னை, மார்ச் 17– 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் அங்கீகார பெருவிழா கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் […]

Loading

செய்திகள்

என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை: திருமாவளவன் ஆவேசம்

சென்னை,ஜன. 25– என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை என்று திருமாவளவன் ஆவேசமாக பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் இணைந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– பெரியாரை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். அரசியலில் என்னை […]

Loading

செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதத்திற்கு இடைநீக்கம்

கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு சென்னை, டிச. 09– விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியிருந்தார். இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்

வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் வழங்கினார் சென்னை, டிச.9– தி.மு.க.வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதலமைச்சரிடம் திருமாவளவன் அளித்தார். முன்னதாக வி.சி.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும், எம்.பி.க்களின் 2 மாத சம்பளமும் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Loading

செய்திகள்

அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கும் சாதி வெறி – மதவெறி சக்திகள்

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை ‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ சென்னை, டிச 6– தமிழ்நாட்டில் திராவிட மாடல் திமுக அரசுக்கு அவப்பெயர் உண்ணடாக்க நினைக்கும் சாதிவெறி மதவெறி சக்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். ‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ என்று அவர் உறுதிபட கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற, தூய்மைப் பணியாளர்களை தொழில் […]

Loading

செய்திகள்

வன்மம் கக்குவோரை கண்டும் காணாமல் கடப்போம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை, நவ. 21– வன்மம் கக்குவோரை கண்டும் காணாமல் கடந்து செல்வோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அதன்படியே கருத்தியல் தளங்களிலும் செயற்பாட்டுக் களங்களிலும் தொடர்ந்து மக்களோடு நின்று பாடாற்றிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. விமர்சனங்கள் எவ்வாறாயினும் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் பொறுமையையும் பின்னர் அவற்றினடிப்படையில் சுய விமர்சனம் செய்துகொள்கிற […]

Loading

செய்திகள்

விஜய் பேச்சின் தெளிவற்ற பகுதிகளை சுட்டிக்காட்டினேன்; வன்மம் இல்லை

விசிக தலைவர் திருமாவளவன் தகவல் சென்னை, நவ. 01– விஜய் கட்சி மாநாட்டின் போது, அக்கட்சி தலைவர் விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களையே சுட்டிக்காட்டியதாகவும், தனக்கு தனிப்பட்ட வன்மம் இல்லை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:– எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுககாரர். தேர்தல் அனுபவம் உள்ளவர். அவருக்குப் பின்னால் வந்த எந்த நடிகருக்கும் […]

Loading

செய்திகள்

அதிமுகவுக்கு அழைப்பு ஏன்? மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் விளக்கம்

சென்னை, அக். 03– மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது ஏன் என்றும் மதுவிலக்கை தமிழ்நாட்டில் தள்ளி வைத்தது யார் என்பது குறித்தும் திருமாவளவன் மாநாட்டில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசியலில் அதிகம் எதிர்நோக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விசிக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டனர். விசிக தலைவர் திருமாவளவன் […]

Loading

செய்திகள்

தமிழக அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு: திருமாவளவன் மீண்டும் பரபரப்பு வீடியோ

சென்னை, செப். 22– தமிழக அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு என்று திருமாவளவன் மீண்டும் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடந்த சில நட்களுக்கு முன்பு “ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்” என்று வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனிடையே கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2ந்தேதி நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார். இந்த விவகாரம் […]

Loading

செய்திகள்

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநட்டின் நோக்கம்

கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயார்: திருமாவளவன் பரபரப்பு பேட்டி சென்னை, செப். 16– மது ஒழிப்பில் பாமக பி.எச்டி. முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார் என அன்புமணி ராமதாஸ், விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சித்தார். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் எல்.கே.ஜி., தான். பா.ம.க., பி.ஹெச்.டி.தான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் […]

Loading