“எங்கள ஒன்னும் செஞ்சிராதீங்க. உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்க எடுத்துட்டு போங்க” என்று தன் இரு கைகளையும் தூக்கிச் சரண்டர் அடைந்தாள் தாரணி “இல்ல உன்ன பார்த்தா எங்களுக்கு சந்தேகமா இருக்கு .போலீஸ்ல போட்டு கொடுத்திட மாட்டியே ?” ” கண்டிப்பா செய்ய மாட்டேன் .என்கிட்ட நிறைய பணம் இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. என்னையும் என் குழந்தையை மட்டும் விட்டுடுங்க “ என்று நடுநிசியில் தன் வீட்டுக்குள் புகுந்த திருடர்களிடம் மன்றாடி கொண்டிருந்தாள் […]