செய்திகள்

சிங்கப்பூர் பள்ளி தீ விபத்தில் உயிர்தப்பிய மகன், திருப்பதியில் பவன் கல்யாணின் மனைவி மொட்டை அடித்து வேண்டுதல்

திருமலை, ஏப். 14– சிங்கப்பூர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவு செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஸ்னேவா. இவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர். 2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஐதராபாத்தில் தான் […]

Loading

செய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை: பக்தர்களுக்கு தேவஸ்தானம் கட்டுப்பாடு

திருப்பதி, பிப். 20– திருப்பதி திருமலை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணிக்கே நடைபாதை மூடப்படும் என்று பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபிரி வழியாக நடை பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் அலிபிரியில் இருந்து நடைபாதையின் 7வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் […]

Loading

செய்திகள்

திருப்பதியில் போலி ரூ.300 தரிசன டிக்கெட் விற்ற மோசடி கும்பல் கைது

திருப்பதி, ஜன. 19– திருப்பதியில் ரூ.300 போலி டிக்கெட்டுகளை போட்டோஷாப் மூலம் தயார் செய்து, டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் பிடிபட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் லட்சுமிபதி என்ற ஊழியர் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் மறைமுகமாக கூட்டு சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானுபிரகாஷ் ஆகியோர் பக்தர்கள் கொண்டு செல்லும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை, போலியாக போட்டோஷாப் மூலம் தயார் […]

Loading

செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்

தேவஸ்தானம் புதிய அறிவிப்பு வெளியீடு திருப்பதி, ஜன. 19– திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் இன்றுடன் (ஜனவரி 19) முடிவடைவதையடுத்து ஜனவரி 20 ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்படத்தக்க வகையில் இலவச தரிசனம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 20 ந்தேதி முதல் டோக்கன் இல்லாமல் நேரடி வரிசையில் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ந்தேதி ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன் விநியோகம் […]

Loading

செய்திகள்

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளை மீண்டும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு வழங்குங்கள்

ஆந்திரா அமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் கோரிக்கை சென்னை, டிச.18- திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஆந்திரா மந்திரியிடம் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கடந்த 1974-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஒருநாள் திருப்பதி சுற்றுலா பயணத்தை இயக்கி வருகிறது. 1997-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு […]

Loading

செய்திகள்

திருப்பதியில் 90 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசனம்

திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதி, டிச. 03– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசனத்தில், ஒரு நாள் தரிசனம் செய்தால் அடுத்த 90 நாட்களுக்கு தரிசனம் செய்ய முடியாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை புரிகின்றனர். இலவச தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், விஐபி தரிசனம் என பல்வேறு முறைகளில் […]

Loading

செய்திகள்

நடிகை ஜோதிகா திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதி, நவ. 27– நடிகை ஜோதிகா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கங்குவா’. இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. படக்குழு எதிர்ப்பார்த்த விமர்சனம் திரைப்படம் பெறவில்லை. பலர் இப்படத்தின் மீது எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா பதிவு ஒன்றை பதிவு செய்தார். அப்பதிவு இணையத்தில் வைரலானது.சூர்யா அடுத்ததாக கார்த்தி சுப்பராஜ் இயக்கியுள்ள சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். […]

Loading

செய்திகள்

திருமலை திருப்பதியை முன்மாதிரி நகராக மாற்ற திட்டம்: தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு

திருமலை, நவ. 22– திருமலை திருப்பதி நகரை முன்மாதிரி நகரமாக மாற்றுவதற்கான அறிவிப்புகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நாட்டின் பணக்கார கோவில்களில் ஒன்றான ஏழுமலையான் கோவிலுக்கு, பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையையும் செலுத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை மலைப்பாதை வழியாக நடந்து சென்றும், தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி திருமலையை மாடல் நகரமாக மாற்ற […]

Loading

செய்திகள் முழு தகவல்

திருப்பதிகோயிலில் தரிசனம் செய்ய பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, அக். 26– திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய பாதையாத்திரையாக ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். சாலை மார்க்கமாக வந்து செல்லும் பக்தர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி மலைபாதைகள் வழியாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை தேவஸ்தானம் அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள விவரங்கள் […]

Loading

செய்திகள்

சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருப்பதி கோவிலில் சமர்ப்பணம்

சென்னை, அக் 8–- சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வெண்பட்டு திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் வழங்கப்பட்டது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது தமிழகத்தில் இருந்து ஏழுமலையானுக்கு வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த திருக்குடைகள், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவையில், மலையப்ப சாமி வீதிஉலா வரும்போது சாற்றப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்துக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் […]

Loading