செய்திகள்

செட் வேகத்தில் உயர்ந்த மல்லிகை பூ விலை: கிலோ ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை

சென்னை, ஜன. 10: திண்டுக்கல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூ உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ.10,000 தாண்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் ஐ.எஸ்.ஓ தர சான்று கொண்ட மதுரை மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் அதிகாலை பனிப்பொழிவு காரணமாக […]

Loading

செய்திகள்

அரசு பஸ் – மோட்டார் சைக்கிள் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி

திண்டுக்கல், செப். 10– திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன்கிழவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இவரது உறவினர் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22). இவர்கள் இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பாலசுப்பிரமணியும் புவனேஸ்வரியும் இன்று காலை வடமதுரை அருகே […]

Loading

செய்திகள்

சென்னை, திண்டுக்கல், தென்காசி உள்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை

திண்டுக்கல், ஆக. 20– திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமக முன்னாள் நகர செயலாளர் ஆவார். மதமாற்றம் தொடர்பான மோதலில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது […]

Loading

செய்திகள்

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

தி.மு.கவினர் தர்ணா போராட்டம்; பரபரப்பு திண்டுக்கல், ஆக. 16– திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழநி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக இன்று காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு 3 வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி […]

Loading

செய்திகள்

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் அணி: ஆதாரத்தை சமர்ப்பிக்க மதுரை அணிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உத்தரவு

சென்னை, ஜூன் 17– 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 14-ந்தேதி […]

Loading

செய்திகள்

திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்

திண்டுக்கல், ஏப். 14– திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே பன்றிமலை, ஆடலூர் செல்லும் மலைப்பாதையில் அமைதிச்சோலை வனப்பகுதியில் ஆதிமூல பிள்ளை ஓடை உள்ளது. இந்த ஓடையில் இருந்து சுமார் 500 அடி பள்ளத்தில், இளம்பெண் ஒருவரின் உடல் தீப்பிடித்து எரிவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கன்னிவாடி போலீசார்க்கு மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஒட்டன்சத்திரம் […]

Loading