அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு வண்டலூர், செப்.6- ஆசிரியர் பணி என்பது அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் அறப்பணியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழாவையொட்டி சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளை […]