” நான் அப்பவே சொன்னேன் சீக்கிரம் வான்னு. நீ தான் கேட்கல. இப்ப பாரு எவ்வளவு கூட்டம் இருக்குன்னு. அதுவும் வெயில் வேற. இந்த கூட்டத்தில் நின்னு என்னைக்கு சாமி தரிசனத்தை பார்க்கிறது ? “ என்று அலுத்துக் கொண்டான் வேங்கடசாமி. ” இல்ல , கண்டிப்பா தரிசனத்துக்கு போய் சேந்துரலாம் .நீ நில்லு” என்று அவனை சமாதானப்படுத்தினான் கார்த்திகேயன் .இருவரும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். பிரகாரத்திற்கு முன்பாக வெட்ட வெளியில் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. […]