செய்திகள்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை, ஜன. 23– பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வழிவகை செய்யும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் […]

Loading

செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் 22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்குங்கள்

ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு கடிதம் சென்னை, ஜன.21-– தொடர் மழை-–பனி மூட்டம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-–2003 ‘காரிப்’ பருவம் […]

Loading

செய்திகள்

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை, டிச. 22 வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளன. இந்நிலையில், வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக் கோரி, முனியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் […]

Loading

செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு அவசரகால பைக் ஆம்புலன்ஸ்: தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, நவ.8– அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் (பைக் ஆம்புலன்ஸ்) 1.60 கோடி ரூபாய் செலவில் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும். மாநிலம் முழுவதும் உள்ள எளிதில் அணுக முடியாத […]

Loading

செய்திகள்

‘‘சமூக நலத்துறையில் காலிப் பணியிட விவரத்தை தவறுதலாக பதிவேற்றம் செய்த இணை இயக்குனர்சஸ்பெண்ட்’’

சென்னை, நவ. 5 ‘‘சமூக நலத்துறையில் காலிப் பணியிட விவரத்தை தவறுதலாக பதிவேற்றம் செய்த இணை இயக்குனரை சஸ்பெண்ட் செய்வதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் […]

Loading

செய்திகள்

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூர், நவ. 5 கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 462 […]

Loading

செய்திகள்

தீபாவளிக்கு தனியார் பஸ்களை அரசு இயக்கும் முடிவை கைவிட வேண்டும் : ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை, அக். 26 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை அரசு எடுத்து இயக்கும் முடிவை கைவிடவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் 2–ம் கட்டப் பணிகள்: அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை, அக் 26 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– கலைஞரின் ஆட்சி காலத்தில் 2007–ம் ஆண்டு தமிழ்நாடு அரசும் – ஒன்றிய அரசும் இணைந்து மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம். 22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு […]

Loading

செய்திகள்

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, கலைஞர் கனவு இல்லம்

மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் மதுரை, அக். 15– மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் வழங்கப்படும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தல் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாஞ்சோலை தேயிலை […]

Loading