செய்திகள்

சட்டசபையில் உரையாற்றாதது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்

சென்னை, ஜன. 20: பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளது, ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டசபையில் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் […]

Loading

செய்திகள்

20-ந்தேதி முதல் தொடர் போராட்டம்: அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஜன. 10: எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால் 20–ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

வரி வருவாயைப் பெருக்குவதில் கவனம் செலுத்துங்கள்: ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே ப.சிதம்பரம் அறிக்கை

சென்னை, ஜன. 4: சொந்த வரி வருவாயை பெருக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழுவிவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே. தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் 21–22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த […]

Loading

செய்திகள்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதா திருப்பி அனுப்பிய ஜனாதிபதி

சென்னை, டிச. 30: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பான சட்டசபை சட்ட திருத்த மசோதாவை ஜனாதிபதி 3 ஆண்டுகளுக்கு பின் திருப்பி அனுப்பினார். தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை, வேந்தரான கவர்னரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு […]

Loading

செய்திகள்

அரசியல் பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5–ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, டிச. 19: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் தமிழக அரசு வகுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 27–ந் தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசியல் கட்சித் தலைவர் களின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு, எஸ்.ஓ.பி., எனும் நிலையான வழிகாட்டு விதி முறைகளை வகுக்கக் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் சேவை

சென்னை, நவ. 24: சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் திட்டத்திற்கான இறுதி வழித்தட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் தென் மத்திய ரெயில்வே வழங்கியுள்ளது. உலக அளவில் வளர்ந்த நாடுகளில் அதிவேக புல்லெட் ரெயில் சேவை இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புல்லெட் ரெயில் சேவை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் புல்லெட் ரெயில் திட்டம் மராட்டிய மாநிலம் […]

Loading

செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை, நவ. 20: நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இது உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘கோவைக்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு

சென்னை, நவ. 19: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. அவற்றில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, இந்திய தேர்தல் […]

Loading

செய்திகள்

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்

தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை, அக். 27– அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில், அதன் தலைவர் விஜய் பேசியபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய தெருக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், […]

Loading

செய்திகள்

போலீசாரின் அறிவுரைகளை த.வெ.க.வினர் ஏற்கவில்லை; தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம்

சென்னை, அக்.1- கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், ஆம்புலன்ஸ்கள் வருகை குறித்து தமிழக அரசு அதிகாரிகள், டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் விளக்கம் அளித்தனர். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என தவெகவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் நேற்று விஜய் வீடியோ […]

Loading