செய்திகள்

தமிழகத்தில் 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை, மே.11- தமிழகத்தில் 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் விரைவில் தொடங்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 5,654 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் 52,87,000 பேர் […]

Loading

செய்திகள்

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி சென்னை, மே 8– பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில் மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி கடந்த மாதம் 17ம் தேதி […]

Loading

செய்திகள்

இன்று வணிகர் தினம் : தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு

சென்னை, மே 5– இன்று வணிகர் தினம். இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்துக்கடை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடை மட்டும் திறக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை, ஜவுளி மற்றும் நகைக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழகம் முழுவதும் மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியும்வெறிச்சோடி காணப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் ஆண்டு தோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

கடும் சோதனைக்குப் பின் நீட் தேர்வு தொடங்கியது

சென்னை, மே 4– நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

நீட் தேர்வு பயம் : தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சென்னை, மே 4– நீட் தேர்வு பயத்தில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணவி கயல்விழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

100 நாள் வேலை திட்டம் !

தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதி விடுவிப்பு சென்னை, 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ 9.60 கோடி கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம், ஏப். 30– தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 9.60 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 4 பேரை கைது செய்தனர். நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடத்தல் அதிகரித்து வருகிறது. கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து அதிகப்படியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு […]

Loading

செய்திகள்

மருத்துவக்கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டம்:

சட்டசபையில் மசோதா நிறைவேறியது சென்னை, ஏப்.30- தமிழகத்தில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபசார தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் சட்டம் 1982-ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்றும், இந்த சட்டம் அதற்கேற்றபடி திருத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து […]

Loading

செய்திகள்

கோல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து:

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி கோல்கட்டா, ஏப்.30 கோல்கட்டாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் : சென்னை, ஏப்.26- தமிழகத்தில் இந்த நிறுவனத்தால் தற்போது 266 ஆதார் பதிவு உள்ளது. ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் உள்ளாட்சி அலுவலகங்களில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * தமிழகத்தில் […]

Loading