சென்னை, மே.11- தமிழகத்தில் 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் விரைவில் தொடங்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 5,654 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் 52,87,000 பேர் […]