கடலூர், ஜூன் 11– கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாயமேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆகியோர் தங்களது ஊரிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு நேற்று இரவு பாதயாத்திரை புறப்பட்டனர். இன்று அதிகாலை […]