செய்திகள்

நேபாளத்தில் 7.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சீன எல்லையில் 53 பேர் பலி

காத்மண்டு, ஜன. 07– நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சீனா – திபெத் எல்லை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் இன்று (ஜனவரி 7) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) மையத்தின் அறிவிப்பின் படி, நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே […]

Loading

செய்திகள்

தேர்வு பயம்: டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!

புதுடெல்லி, டிச. 22– டெல்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் 2 பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் அந்தப் பள்ளியின் மாணவர்களே என டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி சிறப்பு காவல்படையினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்தபோது, அவை அந்தந்த பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களால் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்தி வைப்பதற்காக இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரையும் […]

Loading

செய்திகள்

டெல்லியில் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவு

புதுடெல்லி, டிச.12 டெல்லியில் கோடைகாலங்களில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது. டெல்லியில் இன்று குளிர்காலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. அயநகர் மற்றும் புசா உள்ளிட்ட இடங்களில் முறையே 3.8 மற்றும் 3.2 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறுகையில், “வெப்பநிலை 4 டிகிரிக்கும் கீழே குறையும் போது குளிர் அலைகள் உருவாகின்றன. டெல்லியில் நேற்று […]

Loading

செய்திகள்

டெல்லியில் ஒரே நாளில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனை

புதுடெல்லி, டிச. 9– டெல்லியில் 40 பள்ளிகளுக்கு ஒரே நாளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதுமே கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரிகள், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் […]

Loading

இந்தியா 76! செய்திகள் முழு தகவல்

ஏப்ரல் முதல் ‘கலைமகள்’ யூடியூப் சேனல்

சென்னை, நவ. 2 “கலைமகள்- யூடியூப் சேனலை அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் முதல் கொண்டு வரலாம் என்கிற எண்ணம் உள்ளது. இதேபோல் டெல்லியில் திருக்குறள் களஞ்சியம் நூலினை வெளியிடும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் கலைமகளின் 94வது ஆண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். விழாவில் மூன்று தமிழ் ஆளுமைகள் பாராட்டப்படுவதுடன் “கலை மகள்” பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட எண்ணி உள்ளோம்” என்று பதிப்பாளர் பி […]

Loading

செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசு தீவிரம்

புதுடெல்லி, அக். 18– டெல்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்காக 21 அம்ச செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. […]

Loading

செய்திகள்

டெல்லியில் பள்ளி மாணவர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி

புதுடெல்லி, அக்.2– பள்ளி மாணவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இன்று தூய்மைப் பணிகளை மேற்கொண்டார் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். இதற்கான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்து […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது

சென்னை, செப். 22– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடியை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39) மற்றும் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளை சேர்ந்தவர்கள், ரவுடிகள், […]

Loading

செய்திகள்

மும்பை, டெல்லியில் ஐபோன்–16 வாங்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

டெல்லி, செப். 20– இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 இன்று முதல் விற்பனை தொடங்கிய நிலையில், அதனை வாங்க அதிகாலை முதலே, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இட்ஸ் கிளோடைம் நிகழ்வு இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் […]

Loading

செய்திகள்

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? 2 பெண்களுக்கு இடையே போட்டி

புதுடெல்லி, செப். 16– டெல்லியில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அக்னி பரீட்சையில் இறங்கி, மக்களின் தீர்ப்பை கேட்கப் போவதாகவும், சட்டசபைக்கு தேர்தலை முன்னதாக நடத்தும்படி கோர உள்ளதாகவும் அவர் அறிவித்தார். ‘அடுத்த […]

Loading