செய்திகள்

டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, மே 11– பாகிஸ்தான் உடனான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து இந்தியா– பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

போர் இந்தியாவின் தேர்வு அல்ல– சீன அமைச்சரிடம் தோவல் விளக்கம்

டெல்லி, மே 11– போர் என்பது இந்தியாவின் தேர்வு இல்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழந்த நிலையில் திடீரென சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை போர் சூழலால் தகித்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டை அடுத்து சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் சம்மதித்தன. இருநாடுகளின் சம்மதத்தை அடுத்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல்

டெல்லி, மே 9– பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை முறியடித்த இந்திய ராணுவம், அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. தீவிரவாத முகாம்களை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத் தளங்களையும் வெற்றிகரமாக தகர்த்தெறிந்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லையோரங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனை எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பெருமைப்படுகிறோம்: ராணுவத்துக்கு காங்கிரஸ் ராகுல் பாராட்டு

டெல்லி, மே 7– சிறப்பாக செயல்பட்ட, இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பெருமைப்படுகிறோம் மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், […]

Loading

செய்திகள்

சென்னையில் போதைப் பொருள் விற்பனை

டெல்லியில் பதுங்கியிருந்த மேலும் 2 பேர் கைது சென்னை, மே 5– சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் டெல்லியில் பதுங்கியிருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, மார்ச் மாதம் 9–ந் தேதி ஒயிட்ஸ் ரோடு, சுமித் ரோடு சந்திப்பில் கண்காணித்து, மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா […]

Loading

செய்திகள்

டெல்லியில் இடி மின்னலுடன் கனமழை !

மரம் விழுந்து 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி புதுடெல்லி, மே 2 டெல்லியில் இன்று அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து குடியிருப்பின் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் தாய் என 4 பேர் உயிரிழந்தனர். பலத்த காற்று வீசியதால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது, 40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. டெல்லியில் இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை […]

Loading

செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு :

புதுடெல்லி, ஏப்.22- டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். ஜே.டி.வான்சுடன் அவருடைய மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் டெல்லியின் பிரதிபலிப்பான அக்சர்தாம் கோவிலுக்கு சென்றனர். இதன்பிறகு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் லோக் […]

Loading

செய்திகள்

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; 14 பேர் உயிருடன் மீட்பு

டெல்லி, ஏப். 19– டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். 4 பேர் பலி […]

Loading

செய்திகள்

வக்ப் சட்டத் திருத்தம்: எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி, ஏப். 16– வக்ப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. வக்ப் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தியதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்கள் மற்றும் எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதை அடுத்து வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்ப் சட்டத் திருத்த மசோதா […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்

புதுடெல்லி, மார்ச் 25- அதிமுக பொதுச்செயலாளர் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி  பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட சென்றுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்திருந்தது. தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் […]

Loading