புதுடெல்லி, நவ. 2 கடந்த அக்டோபர் மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் மாதம் உள்நாட்டு விற்பனை அதிகரித்ததால் ஜி.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளது. இதனால் அக்டோபர் மாதம் 9 சதவீதம் அதிகரித்து ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.33,821 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.41,864 கோடியாகவும், […]