செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மக்களுக்கு உதவிய இந்திய ராணுவம்

ஸ்ரீநகர், மே 17– ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நேரிட்டபோது, ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். இந்த தாக்குதல்களின்போது பலர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை

ஸ்ரீநகர், மே 14– ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பெருமைப்படுகிறோம்: ராணுவத்துக்கு காங்கிரஸ் ராகுல் பாராட்டு

டெல்லி, மே 7– சிறப்பாக செயல்பட்ட, இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பெருமைப்படுகிறோம் மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை

அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி பூஞ்ச், ஏப். 28– ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் (4வது நாளாக) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்;

அமெரிக்கா, இங்கிலாந்து, பாரிசில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் வாஷிங்டன், ஏப். 28– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 22ல் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தக்க பதிலடி தருவதற்கு ஏற்பாடுகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு முன்னால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

ஸ்ரீநகர், ஏப்.20– ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அருகே இருந்த தரம்கண்ட் என்ற கிராமத்தை சூழ்ந்தது. மேலும், நிலச்சரிவால் கிராமத்தில் இருந்த 10–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை : பஞ்சாப் இளநிலை அதிகாரி வீர மரணம்

புதுடெல்லி, ஏப் 12– ஜம்மு- காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் வீர மரணமடைந்தார். ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சத்ரு வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் மாநில போலீஸாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில் அன்று இரவு தீவிரவாதிகளுடன் […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், டிச. 19– ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த என்கவுன்டரின்போது 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீர் | கான்யாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர், நவ. 2 ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான கான்யாரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சூடு நடைபெற்றது. இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, “கான்யார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் இன்று காலை அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், தங்கள் மீதான தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். அதனைத் தொடந்து […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, அக். 17– ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றுள்ளதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக […]

Loading