செய்திகள்

கலவரத்தை ஏற்படுத்த நினைத்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்: சேகர்பாபு

சென்னை, பிப்.5– திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படுத்த நினைத்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என பா.ஜ.க.வினரை அமைச்சர் பி.கே. சேகர்பாபு எச்சரித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சென்னை, ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் திருக்கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– இந்த அரசு ஏற்பட்ட பின், இதுவரை 2,504 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளதோடு, வருகின்ற 9 […]

Loading

செய்திகள்

ரூ. 7132 கோடியில் 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்பு : சேகர்பாபு தகவல்

சென்னை, பிப் 1– தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 7 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12 ஆயிரத்து 202 கோவில்களில் 5,515 கோடி ரூபாய் செலவில் 23 ஆயிரத்து 234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் […]

Loading

செய்திகள்

மருதமலை கோயிலில் ஆசியாவிலேயே மிக உயர முருகன் சிலை அமைக்கப்படும்: சேகர்பாபு தகவல்

சென்னை, ஜன 28– ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக மருதமலை கோயிலில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். மருதமலை, சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது என்றார். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (27–ந் தேதி) கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். […]

Loading

செய்திகள்

உண்டியலில் விழுந்த ஐபோன் திருப்பி வழங்கப்படும்: சேகர்பாபு தகவல்

சென்னை, ஜன. 5– திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன் திருப்பி வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம், அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் வழிபாட்டுக்கு சென்றிருந்தார். இந்த சமயத்தில் உண்டியலில் காணிக்கை செலுத்த முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக கையில் வைத்திருந்த ஐபோனும் உண்டியலினுள் விழுந்தது. இதனை கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, உண்டியலில் விழும் காணிக்கை அனைத்தும் முருகனுக்கே சொந்தம் […]

Loading

செய்திகள்

நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் : அலுவலர்களுடன் சேகர்பாபு கலந்தாய்வு

சென்னை, டிச 20– தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 2024–-2025–ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதிய நிலை குறித்தும் சி.எம்.டி.ஏ. சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் (பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையம்) அமைப்பது தொடர்பாகவும், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் சுரங்க பாதைகளை அழகுபடுத்துதல் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னர் சேகர்பாபு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சாதனைகள் அடங்கிய ‘‘காபி டேபிள்’’ புத்தகத்தை வெளியிட்டார். இக்கூட்டத்தில் […]

Loading