செய்திகள்

சென்னையில் ரூ. 30 கோடி செலவில் 200 புதிய நிழற்குடைகள்

சென்னை, மார்ச். 19– பெருநகர சென்னை மாநகராட்சியில், 200 எண்ணிக்கையிலான புதிய பேருந்து நிழற்குடைகள் சுமார் ரூபாய் 30 கோடி செலவில் அமைக்கப்படும் என்று மேயர் ஆர்.பிரியா அறிவித்தார். 2025–26ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையை மேயர் இன்று காலை மன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை ஆகிய இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை தரம் உயர்த்தி […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை, பிப். 26-  சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் மூலம் தினந்தோறும் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வரும் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 […]

Loading

செய்திகள்

5,500 க்கும் மேற்பட்ட சாலைப் பணிகளுக்கு ஜனவரியில் டெண்டர்: சென்னை மாநகராட்சி

சென்னை, டிச. 22– சென்னை மாநகராட்சி (ஜிசிசி) சார்பில், 5,500க்கும் மேற்பட்ட சாலைப் பணிகளுக்கு ஜனவரியில் டெண்டர் விட திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில், 5,500 க்கும் மேற்பட்ட சாலைப் பணிகளுக்கு ஜனவரியில் டெண்டர் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள் சாலைகள் மற்றும் பேருந்து வழித்தட சாலைகளும் அடங்கும். பொதுவாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் டெண்டர்கள் விடப்படுவது வழக்கமாக உள்ள நடைமுறை. ஆனால் சாலைப் பணிகளை விரைவுபடுத்த, டெண்டர் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிதொடங்கி வைத்தார்

சென்னை , செப் 12– சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ஆர். பிரியா இன்று தொடங்கி வைத்தார். 2024–25ம் கல்வியாண்டில் மேயரின் 14வது அறிவிப்பான சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே, டேக்வோண்டோ பயிற்சியானது, திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குக்ஸ் சாலை–சென்னை உயர்நிலைப்பள்ளி, ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டன் தெரு– சென்னை உயர்நிலைப்பள்ளி, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தா தெரு–சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, […]

Loading