சென்னை, மார்ச். 19– பெருநகர சென்னை மாநகராட்சியில், 200 எண்ணிக்கையிலான புதிய பேருந்து நிழற்குடைகள் சுமார் ரூபாய் 30 கோடி செலவில் அமைக்கப்படும் என்று மேயர் ஆர்.பிரியா அறிவித்தார். 2025–26ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையை மேயர் இன்று காலை மன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை ஆகிய இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை தரம் உயர்த்தி […]