செய்திகள்

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை, டிச. 19: சென்னையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் வாக்காளர் திருத்த சிறப்பு பணிகளுக்காக கடந்த மாதம் நடைபெறவில்லை. இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ரூ.25.95 கோடி […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சியில் இது வரை 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

சென்னை, டிச. 15: சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 1,05,556 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 2,930 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த […]

Loading

செய்திகள்

வளசரவாக்கத்தில் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த 10 ஆயிரம் சதுர அடி கட்டிடம் இடிப்பு

சென்னை, டிச.13– உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடத்தில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடம், மாநகராட்சியின் அலுவலர்களால், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நேற்று (12–ந் தேதி) ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி […]

Loading

செய்திகள்

பெருங்குடி, கொடுங்கையூரில் 48.41 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டது

சென்னை, டிச. 11: சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 48.41 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி 100.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தின் 250 ஏக்கர் ஆகும். இதில் 225 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இதில் 27.50 லட்சம் டன் அளவில் திடக்கழிவுகள் உள்ளது என கணக்கிடப்பட்டது. இத்திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தினை மீட்டெடுக்க ரூ.350.65 […]

Loading

செய்திகள்

சென்னையில் 33,418 செல்லப்பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தும் உரிமங்கள் விநியோகம்

சென்னை, நவ. 24: சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 77 ஆயிரத்து 707 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 33,418 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நேற்றுடன் (23–ந் தேதி) செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘கெட் ஃபிட் சென்னை’ நடை , சைக்கிள் பயணம்: பங்கேற்றவர்களுக்கு மா.சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்

சென்னை, நவ. 17: சென்னை மாநகராட்சியின் சார்பில், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் இணைந்து சென்னை மாநகர மக்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை பேணுகின்ற நலவாழ்வு முயற்சியாக கடந்த 1–ந் தேதி அன்று காலை வேளச்சேரி–தரமணி எம்.ஆர்.டி.எஸ் சாலையில் ‘கெட் பிட் சென்னை’ எனும் நடைபயணம் மற்றும் சைக்கிள் பயணம் நிகழ்வினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொடங்கி வைத்தார். பங்கேற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். துணை ஆணையாளர் எச். ஆர். கெளஷிக் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை […]

Loading

செய்திகள்

சென்னையில் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது

சென்னை மாநகராட்சி தகவல் சென்னை, அக்.29– சென்னையில் மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த 17–ந் தேதி அன்று காலை 8.30 மணி முதல் இன்று (29–ந் தேதி) காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னையில் 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று (28–ந் தேதி) காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 8.99 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. […]

Loading

செய்திகள்

தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் மேம்பாலம் : ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, செப் 30– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை, சி.ஐ.டி. நகர் தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் நினைவாக “ஜெ. அன்பழகன் மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிஐடி நகர் பிரதான சாலையில் நிகழ்ச்சி நடந்தது. பெருகிவரும் போக்குவரத்தினைக் […]

Loading

செய்திகள்

6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றம் : சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, ஜூலை 23– சென்னை மாநகராட்சியில், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் பிரிமீயர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவனத்தின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் கட்டடம் மற்றும் இடிபாட்டுக்கழிவுகள் அகற்றும் பணியானது […]

Loading