செய்திகள்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்றார்

புதுடெல்லி, மே 14– சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி சுப்ரீம்கோர்ட்டின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு […]

Loading

செய்திகள்

வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, ஏப்.18- வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை விதித்த நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ப் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால் அது சட்டமாகி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க, […]

Loading

செய்திகள்

நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு சென்னை, ஏப்.10-– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடந்தது. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் பரந்தாமன், எழிலன்; காங்கிரஸ் சார்பில் ராஜேஷ் குமார்; விடுதலைச்சிறுத்தைகள் […]

Loading

செய்திகள்

‘பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கலாம் ’: சுப்ரீம் கோர்ட் அதிரடி

தீர்ப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு சென்னை, ஏப் 8– ‘‘தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் […]

Loading

செய்திகள்

கோவில்களில் விஐபி தரிசனம்: ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி, ஜன. 31– கோவில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வரம்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்து உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோவில்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் […]

Loading

செய்திகள்

காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச.21- காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள காலி மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வுகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. அது தொடர்பான ஒரு மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அந்த […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு தள்ளுபடி புதுடெல்லி, டிச.18-– கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அண்ணா தி.மு.க. வக்கீல் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி, டிச. 5– கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக, தேமுதிக, பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த […]

Loading

செய்திகள்

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது

புதுடெல்லி, டிச. 5– தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது. சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில், அதிமுகவை சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெரிய மனதுடன் அதை ஏற்க மறுத்துவிட்டார் எனவும் பேசியிருந்தார்.இந்தப் பேச்சு அதிமுக […]

Loading

செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 18– சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. சிறப்பு புலனாய்வு குழு தினம் தோறும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதன் பேரில் சென்னை ஐகோர்ட் […]

Loading