சென்னை, மே.19- பேரறிவாளனைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்யும் முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் […]