செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்: பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம், ஜன. 2– சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிசம்பர் 25-ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. நாளை மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த […]

Loading

செய்திகள்

சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனத்தில் ஆகாயத்தாமரை கைவினைப் பயிற்சி

சிதம்பரம், டிச. 15: ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியின் நிறைவு விழா சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் இரண்டு வார பயிற்சி நிறைவு பெற்றது. கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் ஹோப் நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சியின் நிறைவு விழாவிற்கு வந்திருந்தவர்களை கிரீடு தொண்டு நிறுவன மேலாளர் நீலகண்டன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குனர் பேராசிரியர் ராமநாதன் […]

Loading

செய்திகள்

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம், டிச. 8– சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி – -2025 பள்ளியின் தாளாளர் சா.குமார், துணைத் தாளாளர் ஏ.ரூபியால் ராணி மற்றும் பள்ளியின் முதல்வர் எஸ்.லியோ பெஸ்கி ராவ் முன்னிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டது. பல துறைகளின் அறிவுத் திறன்களை ஒரே மேடையில் வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இக்கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டைப் பெற்றது. கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணினி அறிவியல் […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சிதம்பரம், நவ. 23: சிதம்பரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் இன்று துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி தொடக்க விழா

சிதம்பரம், நவ. 23: சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன பயிற்சி நிறுவனத்தில் கிராமங்களில் செயல்படுத்தவுள்ள பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றது. சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் மும்பை ரிலையன்ஸ் பவுன்டேஷேன் மும்பை இணைந்து கடலூர் மற்றும் நாகபட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 100 கிராமங்களின் பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திட்டத்தின் கீழ் பேரிடர் அபாயக் குறைப்பு, பேரிடர் தயார்நிலை, பேரிடர் மீப்பு நடவடிக்கை ஆகிய திட்டப்பணிகளை மேற்கண்ட […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் திறந்த நிலை சதுரங்கப் போட்டி: வீனஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

சிதம்பரம், நவ. 18– கடலூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து கேஏஎப்டி செஸ் அகாடமி சார்பில் முதலாவது சிதம்பரம் தாலுகா அளவிலான திறந்தநிலை சதுரங்கப் போட்டி – 2025 சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தாலுகா அளவிலான சதுரங்கப் போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான இளம் சதுரங்க வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, போட்டியை நடத்திய பள்ளி வளாகத்தைச் சேர்ந்த வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் மாணவ மாணவிகள் […]

Loading

செய்திகள்

ஆனித்திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம், ஜூலை 1 சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிற்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் […]

Loading

செய்திகள்

தங்கையை காதலித்த நபரை தட்டிக் கேட்ட சித்தப்பா வெட்டிக்கொலை

சிதம்பரம், மே 23– தங்கை உறவு முறையில் உள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளைஞரை கண்டித்த பெண்ணின் சித்தப்பா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சிதம்பரம் காசிமட தெருவில் அண்ணாமலை நகர் வெள்ளகுளம் மேல் கரை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மகன் காளிதாஸ் (38) என்பவர் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு, காளிதாசன் உறவினரான பாண்டிச்சேரியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் மணி (22) கடையில் […]

Loading