ராய்ப்பூர், மே 12– சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே நேரிட்ட கோர விபத்தில் 14 உயிர்கள் பறிபோனது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராய்ப்பூர்-பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே அமைந்திருக்கும் பனார்சி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சட்டவுட் கிராமத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோர் ஒரு மினி லாரியில் சென்றிருந்தனர். கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் நள்ளிரவு 12.15 மணியளவில் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 14 பேர் பலி அப்போது எதிர்பாராத விதமாக, […]