செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

திருவனந்தபுரம், மே 14– சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கற்பூர ஆழியில் தீ ஐயப்பன் கோயிலில் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவ் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி […]

Loading

செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை: ஒரே நாளில் 85 ஆயிரம் பேர் தரிசனம்

திருவனந்தபுரம், டிச. 20– சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில், 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில் கடந்த 28 நாட்களில் 20 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு தரிசன டிக்கெட் மூலமாக 10 ஆயிரம் பக்தர்களும் சாமி […]

Loading

செய்திகள்

கேரளாவுக்கு ரெட் அலர்ட்: சபரிமலை பக்தர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்

திருவனந்தபுரம், டிச. 13– கேரள மாநிலத்தின் 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரித்து ரெட் அலெர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை மையம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என்பதால் சபரிமலை பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தென் மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு, கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என […]

Loading

செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியோர், குழந்தைகள் விரைவாக தரிசனம் செய்ய தனிப்பாதை

சபரிமலை, நவ. 18– சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசனம் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 18ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், […]

Loading

செய்திகள்

முன்பதிவு செய்யும் 80,000 பேருக்கு மட்டுமே சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கு அனுமதி

திருவனந்தபுரம், அக். 06– சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை சீசனில், சாமி தரிசனத்திற்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடப்பாண்டு மண்டல, மகர பூஜைகளையொட்டி, அடுத்த மாதம் நவம்பர் மாதம் 16 ந்தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

Loading