செய்திகள்

மருத்துவக்கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டம்:

சட்டசபையில் மசோதா நிறைவேறியது சென்னை, ஏப்.30- தமிழகத்தில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபசார தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் சட்டம் 1982-ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்றும், இந்த சட்டம் அதற்கேற்றபடி திருத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து […]

Loading

செய்திகள்

மாதந்தோறும் ரூ.200 கட்டணத்தில் வீட்டுக்கும் அதிவேக இணையதள சேவை

சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு : சென்னை, ஏப்.26- மாதந்தோறும் ரூ.200 கட்டணத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சட்டசபையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்கள் சேவை துறை மானியக்கோரிக்கை யின்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார். எங்களது துறை சார்பாக பொதுமக்களுக்கு, சுமார் 300 இடங்களில் இலவச வைபை சேவை அளித்து கொண்டு இருக்கிறோம். அம்மா உணவகம், பஸ் நிலையம் […]

Loading

செய்திகள்

விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை, ஏப்.9-– ‘கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் நடத்தப்படும்’ என சட்டசபையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், நகைக்கடன் என மொத்தம் ரூ.19,145 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் 38 லட்சத்து 82 ஆயிரத்து 734 பேர் பயன்பெற்றுள்ளனர். 2021–-22-ம் ஆண்டில் 14 லட்சத்து 84 ஆயிரத்து 52 விவசாயிகளுக்கு […]

Loading

செய்திகள்

கருப்புச் சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு

சென்னை, ஏப். 8– சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டசபைக்கு இன்று கருப்புச் சட்டை அணிந்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நேற்று சட்டசபைக்கு வருகை தந்த அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் ‘யார் அந்த தியாகி ‘ என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து டாஸ்மாக் ஊழலை பற்றி விவாதிக்குமாறு பதாகைகளை […]

Loading

செய்திகள்

5,382 சதுர அடி தொழிற்சாலை கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடி அனுமதி

சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு சென்னை, ஏப்.8- வீடுகளுக்கு வழங்குவதுபோல, இனி சுயசான்றிதழ் முறையில் 5,382 சதுரஅடி தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் உடனடி அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, துறை யின் அமைச்சர் முத்துசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * தமிழகத்தில் 2,500 சதுர அடி மனையிடத்தில் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை தரைதளம் மற்றும் முதல்தளம் கொண்ட கட்டிடங்களுக்கு […]

Loading

செய்திகள்

முதல்வர் பதவி விலக பதாகை காட்டிய 7 அ. தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட்

சென்னை, ஏப்.7– சட்டசபையில், முதல்வர் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து 7 அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபையில் இன்று சபை விதிப்படி அனுமதியளிக்க முடியாத ஒரு விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்றதால், அவரையும் அவரது கட்சி உறுப்பினர்களையும் ஒரு நாள் சட்டசபையிலிருந்து வெளியேற்றி சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுத்தார். இன்று சபைக்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரும், அண்ணா தி.மு.க. உறுப்பினர்களும் பல்வேறு கோரிக்கைகளை அச்சிட்ட […]

Loading

செய்திகள்

500 இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை, மார்ச் 14- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துவருகிறார்.  அதில் 500 தமிழ் இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மேலும் இலக்கியங்களை மொழிப்பெயர்க்க முதற்கட்டமாக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #தமிழ்நாடு பட்ஜெட் #சட்டசபை

Loading

செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: சட்டசபையில் தாக்கல்- Live

சென்னை, மார்ச் 14- தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார். மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார். பொதுமக்கள் உடனடியாக […]

Loading

செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள்

சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு இந்த ஆண்டு 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் ‘தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்குவேன்’ சென்னை, ஜன.11– பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் பதிலளித்து பேசினார். […]

Loading

செய்திகள்

பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குப்பதிவு: முதலமைச்சர் சொன்னதே உண்மை

சபாநாயகர் தீர்ப்பு சென்னை, ஜன. 11– பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை […]

Loading