சென்னை, ஜன. 11– பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 4வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் ‘181′ என எழுதியும், வில்லுபாட்டு பாடியபடியும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நூதன முறையில் போராட்டம் நடத்தினர். […]
![]()










