செய்திகள்

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

சென்னை, ஜன. 11– பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 4வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் ‘181′ என எழுதியும், வில்லுபாட்டு பாடியபடியும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நூதன முறையில் போராட்டம் நடத்தினர். […]

Loading

செய்திகள்

20-ந்தேதி முதல் தொடர் போராட்டம்: அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஜன. 10: எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால் 20–ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

16-வது நாளாக தொடரும் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை, ஜன. 9: 16-வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் சாலை அமர்ந்து போராட்டம் நடத்தியதால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என […]

Loading

செய்திகள்

சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, டிச. 29: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Loading

செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

சென்னை, நவ. 29: திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், தரிசனத்திற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுவதாகவும், அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த 9 நாட்களில் மட்டும் தமிழர் உட்பட […]

Loading

செய்திகள்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை, நவ. 28: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சக்கரமல்லூர் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. மாவட்டத்தில் விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையிலான இத்திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். அரசுக்கு இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். நீரோடை வழிப்பாதை ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களுக்கு செல்ல வழி இல்லாமல் […]

Loading

செய்திகள்

திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி: 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

 திருச்சி, ஜூலை 27– திருச்சியில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அண்ணா தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை […]

Loading

செய்திகள்

ஷாலிமார் ரெயில் சென்னை வர கோரிக்கை

தலையங்கம் தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு அலுவல், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தற்போது இயங்கும் ரயில்கள் போதுமானவை அல்ல. குறிப்பாக நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியை மையமாகக் கொண்ட பயணிகள், சென்னைக்கு செல்வதற்கான ரயில் வசதிகள் மிகக் குறைவாக உள்ளன. இதனால் தினசரி பயணிகள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இந்நிலையில், நாகர்கோவில் – ஷாலிமார் வாராந்திர ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து, ஒரே எண்ணைக் கொண்ட “தாம்பரம் – ஷாலிமார்” ரயிலாக மாற்றி இயக்க […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் !

பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு அன்காரா, மே 9– பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை கேட்கும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவிலான நடுநிலை விசாரணை தேவை என […]

Loading