செய்திகள்

சேலம் இரட்டை கொலை வழக்கு : பீகாரைச் சேர்ந்த ஒருவர் கைது

சேலம், மே 12– சேலம் சூரமங்கலம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (வயது 60). இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கரனும், வித்யாவும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைக் கண்ட அப்பகுதி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர், மே 6– ஜம்மு – காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. எல்லையில் தொடர்ந்து 12வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் […]

Loading

செய்திகள்

இலங்கை அரசு கைது செய்த மீனவர்கள் !

சென்னை, மே.6-– இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப் படகுகளையும் மீட்டுக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 2-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் […]

Loading

செய்திகள்

நகை வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி வைரம் கொள்ளை !

தூத்துக்குடியில் 4 பேர் கைது தூத்துக்குடி, மே 5–- சென்னை நட்சத்திர ஓட்டலில் நகை வாங்குவதுபோல் நடித்து வியாபாரியை அடித்து கட்டிப்போட்டு ரூ.23 கோடி வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கும்பலை தூத்துக்குடி போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (70), விலையுயர்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதனிடையே, மதுரையைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு […]

Loading

செய்திகள்

‘பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம்’ என எச்சரிக்கை’

அ.தி.மு.க. நிர்வாகிகள் கைது : எடப்பாடி கடும் கண்டனம் சென்னை, மே 5– தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முன்னாள் எம்.பி. கோ.அரி உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அண்ணா தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம் என்று அவர் எச்சரித்துள்ளார். அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த சில நாள்களாக தற்காலிக தொழிலாளர்கள் […]

Loading

செய்திகள்

சென்னையில் போதைப் பொருள் விற்பனை

டெல்லியில் பதுங்கியிருந்த மேலும் 2 பேர் கைது சென்னை, மே 5– சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் டெல்லியில் பதுங்கியிருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, மார்ச் மாதம் 9–ந் தேதி ஒயிட்ஸ் ரோடு, சுமித் ரோடு சந்திப்பில் கண்காணித்து, மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா […]

Loading

செய்திகள்

ஓட்டேரி அருகே மெத்த பெட்டமைன் போதைப் பொருள்: 2 பேர் கைது

சென்னை, மே 2– ஓட்டேரி அருகே மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்து, போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை முழுமையாக செயல்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் தலைமைச்செயலக காலனி காவல் […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

2 பேர் கைது : சென்னை, ஏப். 30– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரூ. 2.5 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ஆசாம் வாலிபர்கள் 2 பேரை கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 4வது நடைமேடைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வருகையை கவனித்து கொண்டிருந்த சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய ரெயில்வே பாதுகாப்புப்படை காவல்துறை ஆய்வாளர் டி. மதுசூதன் ரெட்டி மற்றும் குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு குழுவினர் சந்தேகத்திற்கிடமான […]

Loading

செய்திகள்

இறுதிச் சடங்கு செலவை தவிர்க்க தந்தை உடலை 2 ஆண்டுகள் மறைத்த மகன் கைது

டோக்கியோ, ஏப். 27– தந்தையின் ஓய்வூதிய பணத்துக்காக, இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்த மகன் கைது செய்யப்பட்டார். ஜப்பானில் உள்ள டோக்கியோவைச் சேர்ந்தவர் நோபுஹிகோ சுசுகி (வயது 56). இவர் சீன உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் தனது உணவகத்தை திறக்காமல் இருந்தார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுசுகியின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி […]

Loading

செய்திகள்

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி வேட்டை: 8 மாதங்களில் 2774 பேர் கைது

குற்ற வழக்குகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன சென்னை, ஏப். 25– சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையால் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தி வருதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2,774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண், நுண்ணறிவுப் பிரிவு காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படை […]

Loading