பீஜிங், செப். 26– சீன ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை பசிபிக் பெருங்கடலில் நடத்தியதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளது. இது குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணிக்கப்பட்ட கடல் பகுதியில் ஏவுகணை சரியாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள், செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சி திறன்களை ஆய்வு செய்ய நடத்தப்பட்ட இந்த சோதனை, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் கூட்டியே தகவல் சர்வதேச சட்டம் மற்றும் […]