செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இணைந்து பணியாற்றுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

நியூயார்க், மே 11– காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்

காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிறீநகர், மே 7– காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில், ஆபரேசன் சிந்தூர் தாக்குதலையொட்டி, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர், மே 6– ஜம்மு – காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. எல்லையில் தொடர்ந்து 12வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

ஜெயில்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் ?

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிப்பு ஸ்ரீநகர், மே 5– காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அதை தாக்கி அழித்த இந்திய ராணுவத்தினர், அங்கிருந்து 5 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் இருக்கும் தங்களது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை மீட்பதற்காக எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், காஷ்மீரில் உள்ள அனைத்து சிறைகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு […]

Loading

செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 3வது நாளாக தாக்குதல்

தயார் நிலையில் இந்திய கடற்படை: ஸ்ரீநகர், ஏப். 27– காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. அரபிக்கடலில் இந்திய கடற்படை எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூஞ்செயலில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்–இ–தொய்பாவின் […]

Loading

செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு : இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர், ஏப். 26– காஷ்மீர் எல்லைக்கோடுப் பகுதியின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22–ந்தேதி பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கர்நாடகம், கேரளம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்- ஏ- தொய்பா பயங்கரவாத […]

Loading

செய்திகள்

காஷ்மீர் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஏப். 25– காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர்–இ–தொய்பா முக்கிய தளபதி சுட்டு கொல்லப்பட்டான். காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது. பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை […]

Loading

செய்திகள்

கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த திட்டம்

இஸ்லாமாபாத், ஏப். 24– காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நேற்று முந்தினம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சிந்து நதி நீர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர், ஏப் 24– பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘‘பயங்கரவாதிகளுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்

தலையங்கம் ஏப்ரல் 22 அன்று ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் 26 பேரின் உயிரைப் பறித்தது. இறந்தவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள். இது கொடிய பயங்கரவாதத் தாக்குதல் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் இப்பகுதியில் நிலவும் பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2019ல் 370–வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத செயல்களில் இதுவும் […]

Loading