செய்திகள்

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 22– கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரிக்கை

சென்னை, ஜன. 4– ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்க காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல் […]

Loading

செய்திகள்

அமித்ஷா சர்ச்சை கருத்து: முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னை, டிச. 18– பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆனால், மத்திய அமைச்சர் அமித்ஷா பெயரைக் குறிப்பிடாமல், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.. அதில், அதிக பாவங்கள் […]

Loading

செய்திகள்

காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள்; பாஜகவின் 16 ஆண்டில் 22 திருத்தங்கள்

நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேச்சு டெல்லி, டிச. 18– காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதாவின் 16 ஆண்டு ஆட்சியில் 22 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்த போது மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, “அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான விதி 368-ல் உள்ளது. அரசியலமைப்பு மாற்றம் காங்கிரஸ் […]

Loading

செய்திகள்

பார்லிமெண்டில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி இருக்கைக்கு அடியில் பணக்கட்டு கண்டுபிடிப்பு

புதுடெல்லி, டிச. 6– காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25–ந்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் துவங்கியதில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடி இன்றைய அலுவல் நேரங்கள் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, மக்களவையை டிசம்பர் 9ம் தேதி காலை 11 […]

Loading

செய்திகள்

பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணி: தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு

புதுடெல்லி, டிச. 3– பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலானது கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் […]

Loading

செய்திகள்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, நவ. 28– காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் காரணமாக இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இளங்கோவன். தற்போது அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை […]

Loading

இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

அகல் விளக்குகள் செய்து அசத்தினார் ராகுல் காந்தி

புதுடெல்லி, நவ. 2 ராகுல் காந்தி அகல் விளக்கு செய்யும் குடும்பம் ஒன்றைச் சந்தித்தார். பின்னர் அவர்களோடு சேர்ந்து தான் செய்த அகல் விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரிக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகள், செருப்பு தைப்பவர், லாரி-–பஸ் டிரைவர்கள், முடி […]

Loading

இந்தியா 76! செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் 167 வேட்பாளர்

மும்பை, நவ. 02 மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் ஒரே தொகுதியில் 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், 9 க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு 20 ந்தேதி நடக்க இருக்கும் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும், காங்கிரஸும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஷ் அகாடி மற்றும் பாரதீய ஜனதா தலைமையிலான மகா யுதி என இரண்டு கூட்டணிகளிலும் தேர்தல் தொகுதி பங்கீடு […]

Loading

செய்திகள்

உ.பி.யில் 9 தொகுதிகளின் இடைத்தேர்தல்: அகிலேஷ் டுவிட்டால் காங்கிரஸ் அதிர்ச்சி?

லக்னோ, அக். 24– உத்தரபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டியிடும் என்று அகிலேஷ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்விடம் கேட்டது. இது தொடர்பாக 2 கட்சித் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, 2 தொகுதிகளை தருவதாக […]

Loading