செய்திகள்

கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

புதுடெல்லி, ஏப். 12– கவர்னருக்கு எதிராக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினையடுத்து 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து முரண்பாடு இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப முடிவு செய்த தமிழக அரசு, துணை வேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது. இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவை (யு.ஜி.சி) சேர்ந்த உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு […]

Loading

செய்திகள்

காசி தமிழ்ச் சங்கமம் விழாவிற்கு சென்னையிலிருந்து சிறப்பு ரெயில் சேவை

கவர்னர் ஆர்.என். ரவி தொடக்கி வைத்தார் சென்னை, பிப். 14– சென்னையிலிருந்து காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் சிறப்பு ரெயிலை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் மூன்றாம் கட்ட நிகழ்வுகள், வரும் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த […]

Loading

செய்திகள்

கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு

கவர்னராக ஆர்.என்.ரவியே தொடர பிரதமருக்கு கோரிக்கை சென்னை, ஜன. 24– கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் காட்டமாக பேசினார். மேலும் தமிழகத்தின் கவர்னராக ஆர்.என்.ரவியே தொடர வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 51 பேர் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3000 பேர் […]

Loading

செய்திகள்

‘உங்களுக்கு திமிர்’; முதல்வருக்கு ஆணவம் என்று கூறிய கவர்னருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை, ஜன.13-– முதல்வருக்கு ஆணவம் என்று கூறிய கவர்னருக்கு, இன்று கவர்னருக்கு திமிர் என்று அமைச்சர் துரைமுருகன் காட்டமாக கூறியுள்ளார். சட்டசபை விவகாரத்தில் கவர்னர் மாளிகை மீண்டும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 6-–ந் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் படிக்கவில்லை என்பதை காரணமாக கூறி, உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. […]

Loading

செய்திகள்

சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை சென்னை, ஜன. 6- சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இந்த நிலையில் சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய […]

Loading

செய்திகள்

11–ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை, ஜன.6– ஜனவரி 11–ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில், அப்பாவு கூறியதாவது: இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மறைவுக்கு சட்டசபையில் நாளை (7–ந்தேதி) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். அடுத்து 4 நாள்கள், அதாவது ஜனவரி 11–ந்தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். கவர்னர் உரை மீதான […]

Loading

செய்திகள்

அச்சிடப்பட்ட கவர்னர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக கவர்னர் செயல்படுகிறார்: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு சென்னை, ஜன.6– அச்சிடப்பட்ட கவர்னர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும், கவர்னர் உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்து முடித்தார். இந்த நிலையில் அச்சிடப்பட்ட கவர்னர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் […]

Loading

செய்திகள்

உரையை வாசிக்காமல் சட்டசபையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார்

புறக்கணிப்பு ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம் சென்னை, ஜன.6 தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் கவர்னர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 […]

Loading

செய்திகள்

மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் விரைவில் புகார் சென்னை, டிச.28- மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் உலகம் எங்கிலும் அறியும் பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது. கடந்த 23-ந்தேதி, இரவு 7.45 மணிக்கு ஞானசேகரன் […]

Loading

செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, நவ. 26– நெஞ்சுவலி காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ்; 67 வயதாகும் இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். ஆனால், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதம் சக்திகாந்த தாசின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி […]

Loading