புதுடெல்லி, ஏப். 12– கவர்னருக்கு எதிராக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினையடுத்து 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து முரண்பாடு இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப முடிவு செய்த தமிழக அரசு, துணை வேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது. இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவை (யு.ஜி.சி) சேர்ந்த உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு […]