செய்திகள்

பெஞ்சல் புயல் பாதித்த 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498.80 கோடி நிவாரணம்

சென்னை, பிப்.19-– ‘பெஞ்ஜல்’ புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.499 கோடி நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ‘பெஞ்ஜல்’ புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதனால் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட தோடு, வீடுகள், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்து, […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு தள்ளுபடி புதுடெல்லி, டிச.18-– கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அண்ணா தி.மு.க. வக்கீல் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி, டிச. 5– கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக, தேமுதிக, பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த […]

Loading

செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் ரூ.2,000 நிவாரணத் தொகை

டோக்கன் விநியோகம் துவங்கியது ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் பட்டுவாடா விழுப்புரம், டிச. 5– விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பெஞ்ஜல் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று அமுதா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா தெரிவித்தார். பெஞ்ஜல் புயல், கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரிதும் […]

Loading

செய்திகள்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம்

விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட 8 மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள்: ஸ்டாலின் அறிவிப்பு * பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் * எருது, பசுக்களுக்கு ரூ.37,500 * சேதமடைந்த குடிசைகளுக்கு புதிய வீடுகள் சென்னை, டிச.3– மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட 8 மாவட்டங்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத்தொடங்கிய பெஞ்சல் புயலின் […]

Loading