சென்னை, டிச. 11– சென்னையில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால் 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக இன்று காலையில் சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தன. […]