செய்திகள்

சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தத்தளிக்கும் மெக்கா

வெள்ளப்பெருக்கில் சிக்கிய வாகனங்கள் ரியாத், ஜன. 08– சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கால், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழை பதிவாகும். சராசரியாக ஆண்டுக்கு 10 சென்டி மீட்டர் மழை பெய்வதே பெரிய விஷயம். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை […]

Loading

செய்திகள்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

சென்னை, டிச. 24– வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:– தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய […]

Loading

செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்

சென்னை, டிச. 18– புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழக– தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். […]

Loading

செய்திகள்

மழை பாதிப்பை சமாளிப்போம்: ஸ்டாலின் உறுதி

சென்னை, டிச.13– மழை வெள்ள பாதிப்பை சமாளித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? முதலமைச்சர் பதில்: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே […]

Loading

செய்திகள்

கனமழை: சுவாமிமலை கோவில் தேரோட்டம் ரத்து

தஞ்சாவூர், டிச. 13– கும்பகோணம் அருகே சுவாமி மலையில் சுவாமிநாத சுவாமி கோவில் திருத்தேரோட்டம் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்காா்த்திகை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி நிகழாண்டு திருக்கார்த்திகை நாளான இன்று திருவிழா நடைபெற இருந்தது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. […]

Loading

செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது

தமிழகத்தில் 11, 12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை, டிச. 6– வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. தமிழகத்தில் 11, 12ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 3– தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நேற்று காலை வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய –கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Loading

செய்திகள்

1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, டிச.3-– புயல் மழையால் 1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், கணக்கெடுப்பு முழுமையாக நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் வழங்கப்படும் என்றும் விழுப்புரம் வெள்ளச்சேதத்தை பார்வையிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக் கணக்கான வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் பயிர்கள் பெருமளவு சேதமடைந்தன. […]

Loading

செய்திகள்

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை: ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவு

* கார்கள் அடித்து செல்லப்பட்டன * வீடுகளுக்குள் வெள்ளம் கிருஷ்ணகிரி, டிச.2– கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் விடிய, விடிய பெய்த கனமழையால் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளதால் வெள்ளக்காடானது. ஊத்தங்கரையில் 16 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்ஜல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே […]

Loading

செய்திகள்

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்: ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்

சென்னை, நவ. 28– வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் காரணமாக சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், […]

Loading