செய்திகள்

சென்னை – கடலூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரூ.52 கோடியில் புதிய ரெயில் பாதை

புதுடெல்லி, மே.13- சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க இந்த நிதியாண்டில் ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2025–2026ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் எத்தனை புதிய திட்டங்கள், எத்தனை இரட்டைப்பாதை திட்டங்கள்? என்பன போன்ற பல விவரங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் முறையாக பதில் அளித்து இருக்கிறது. இதன்படி தமிழ்நாட்டில் 8 புதிய […]

Loading

செய்திகள்

சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் துவங்கியது

கடற்கரை- – செங்கல்பட்டு இடையே இயக்கம் சென்னை, ஏப். 19–- சென்னை கடற்கரை – -செங்கல்பட்டு இடையே சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் […]

Loading

செய்திகள்

பழவேற்காட்டு கடற்கரையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொன்னேரி ஜன-13– திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடற்கரையில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் விழா நாட்களில் கடற்கரையில் அதிகமாக கூடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் குளிக்கும் போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திலும் இரண்டு பேர் இறந்த நிலையில் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் […]

Loading

செய்திகள்

நீலக்கொடி கடற்கரை திட்டத்திற்கு எதிரப்பு

மெரினா கடற்கரை பகுதியில் மீனவர்கள் மறியல் போராட்டம் சென்னை, டிச. 25– நீலக்கொடி கடற்கரை திட்டத்திற்கு எதிரப்பு தெரிவித்து மெரினா லூப் சாலையில் பொதுமக்கள், மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். அந்த வகையில், […]

Loading

செய்திகள்

கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி: 28 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை, நவ.22- சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் இருமார்க்கமாகவும் 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்பட்டு வரும் […]

Loading

செய்திகள்

தாம்பரம்–கடற்கரை ரெயில்கள் ரத்தால் பொதுமக்கள் அவதி

தாம்பரம் – கடற்கரை இடையே ரெயில்கள் ரத்து: மக்கள் அவதி சென்னை, நவ. 17– தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணி

சென்னை, அக்.28 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:– சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்கவேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்தார். சென்ற 2022–ம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான 225 மீட்டர் […]

Loading

செய்திகள்

மெரினாவில் கூட்ட நெரிசலில் 100 பேர் மயக்கம்

சென்னை, அக். 6– மெரினாவில் கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறிப்பாய்ந்த போது பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த […]

Loading