தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் ; ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கு அறிவுறுத்தல் சென்னை, ஏப் 21– திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசு என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]