சிவகங்கை, பிப். 27– சிவகங்கை அருகே தனியார் ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மருத்துவ உதவியாளர் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஓட்டுநராக பணியாற்றுபவர் பெரியண்ணன் (வயது 45). அதே மருத்துவமனை ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மாலா. பெண் உதவியாளர் பலி இந்நிலையில் நேற்று அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு […]