டெல்லி, ஏப். 13– ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததோடு மட்டுமின்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது அவர் 90 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியது. இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் […]