செய்திகள்

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

டெல்லி, ஏப். 13– ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததோடு மட்டுமின்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது அவர் 90 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியது. இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் […]

Loading

செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் 22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்குங்கள்

ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு கடிதம் சென்னை, ஜன.21-– தொடர் மழை-–பனி மூட்டம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-–2003 ‘காரிப்’ பருவம் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் மக்களே ‘மைனஸ்’ ஆக்கிவிடுவார்கள்: விஜய் பரபரப்பு பேச்சு

சென்னை, டிச.7- கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை 2026ல் மக்களே ‘மைனஸ்’ ஆக்கிவிடுவார்கள் என்று சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார். விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான 992 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை […]

Loading

செய்திகள்

இந்தியாவிற்கென தனியான காலநிலை மாதிரியை உருவாக்க வேண்டும்

எல்–நினோ, ல–நினாவால் ஏற்படும் அதி கனமழையை சமாளிக்க ஒன்றிய அரசுக்கு சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தல் டெல்லி, டிச. 01– ஃபெஞ்சல் புயல் அதி கனமழையை கொட்டி தீர்த்து கரையை கடந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு காலநிலை மாதிரி தேவை என்பதை சூழலியல் ஆர்வலர் ஜி.சுந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார். சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவருமான ஜி.சுந்தர்ராஜன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறி இருப்பதாவது:– விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 24 மணி நேரத்தில் 50 செ.மீ மழை பதிவானதாக […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனிக் கழிப்பறை

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் டெல்லி, நவ. 12– நாட்டிலேயே அதிக அளவாக, தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும் கேரளாவில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனிக்கழிப்பறைகள் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் அரசு-உதவிபெறும் பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்- IIக்கு ஒன்றிய அரசின் பங்கு ரூ.7,425 கோடியை வழங்க வேண்டும்

தங்கம் தென்னரசு வலியுறுத்தல் சென்னை, செப். 14– சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் –-II–க்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள செலவு ரூ.18 ஆயிரத்து 564 கோடிக்கு ஒன்றிய அரசு உரிய நிதி பங்களிப்பினை வழங்கிட வேண்டும் -என்று நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு (PIB) பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ.7,425 கோடியை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி இம்பாலா, செப். 10– மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர். மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வெடித்த மோதல், 16 மாதங்களை கடந்தும் இன்னும் ஓயாமல் உள்ளது. இருதரப்பு மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதுடன், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு மணிப்பூரில் இயல்புநிலை திரும்பியதாக […]

Loading