செய்திகள்

சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ–க்கு மாற்ற கோரி மனு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, ஏப். 16– சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், அதன் பின்னணியில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளதாகவும், சவுக்கு சங்கர் சில ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டில் கடந்த மார்ச் 24–ந் தேதி அத்துமீறி நுழைந்த […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மாநில அரசுக்கு 6 வாரம் அவகாசம் பெங்களூரு, ஏப் 3– கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின், மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில் ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட சில […]

Loading

செய்திகள்

சட்ட விரோதமாக தாது மணல் எடுத்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, பிப். 17– சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து உள்ளன. கடந்த 2012 முதல் […]

Loading

செய்திகள்

செப்டிக் டேங்க்: விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்தால் உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும்

ஐகோர்ட் அதிரடி சென்னை, பிப். 1– செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்தால் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது. சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், ஐகோர்ட்டில், தாக்கல் செய்து உள்ள மனுவில், “எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பல முறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த […]

Loading

செய்திகள்

போராட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது 2 நாளில் முடிவெடுக்க வேண்டும்

போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜன. 31– போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், இந்த விண்ணப்பங்கள் மீது 48 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தும்படி சென்னை மாநகர கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2024 நவம்பர் 7ம் தேதி […]

Loading

செய்திகள்

தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் விலக்களிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை, ஜன. 31– குற்றப்பத்திரிகைகள் தாமதம் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் விலக்களிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகைகள் தாமதம் தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது, ‘கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுகளை போலீசார் செயல்படுத்துவதில்லை’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், ‘இது தொடர்பான விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உள்துறை செயலாளர் தீரஜ் […]

Loading

செய்திகள்

ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் வழக்கு: நயன்தாராவுக்கு ஆதரவான நெட்பிலிக்ஸ் மனு தள்ளுபடி

சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜன. 28– நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நயன்தாராவுக்கு ஆதரவாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு […]

Loading

செய்திகள்

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 22– கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, […]

Loading

செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர்: சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னை, ஜன. 22– வேலியே பயிரை மேய்வது போல், போலீசாரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் […]

Loading

செய்திகள்

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது

மனுவை விசாரணைக்கு ஏற்க ஐகோர்ட் மறுப்பு சென்னை, ஜன. 17– பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த சென்னை ஐகோர்ட், இதுசம்பந்தமாக அரசுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியது. இந்த பரிசு தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்க பணம் வழங்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், […]

Loading