செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

புதுடெல்லி, மே7 இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoJK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு திட்டமிட்ட மற்றும் துல்லியமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ஷ்-இ-மொஹம்மதின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரித்கே முகாம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. “இந்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடனும், கணக்கிட்ட […]

Loading

செய்திகள்

கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த திட்டம்

இஸ்லாமாபாத், ஏப். 24– காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நேற்று முந்தினம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சிந்து நதி நீர் […]

Loading

செய்திகள்

அடுத்தடுத்து 400 ஏவுகணை வீசி ஈரான் தொடர் தாக்குதல் : இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

‘‘ஏவுகணைகளை நடு வழியில் வீழ்த்துங்கள்’’ : ராணுவத்துக்கு ஜோ பைடன் உத்தரவு ஜெருசலேம், அக்.2– இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் […]

Loading

செய்திகள்

ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணை வீசினால் உக்ரைன் மீது அணுகுண்டு வீசுவோம்

அதிபர் புதின் கடும் எச்சரிக்கை மாஸ்கோ, செப். 26– ரஷ்யாவின் உள் நகரங்களின் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வீசினால், உக்ரைன் மீது அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் முடிவை ரஷ்யா பரிசீலிக்கும் என்று அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 2 1/2 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா–உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் சேர முயன்ற […]

Loading

செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை பசிபிக் கடலில் நடத்திய சீனா

பீஜிங், செப். 26– சீன ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை பசிபிக் பெருங்கடலில் நடத்தியதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளது. இது குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணிக்கப்பட்ட கடல் பகுதியில் ஏவுகணை சரியாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள், செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சி திறன்களை ஆய்வு செய்ய நடத்தப்பட்ட இந்த சோதனை, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் கூட்டியே தகவல் சர்வதேச சட்டம் மற்றும் […]

Loading