புதுடெல்லி, மே7 இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoJK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு திட்டமிட்ட மற்றும் துல்லியமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ஷ்-இ-மொஹம்மதின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரித்கே முகாம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. “இந்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடனும், கணக்கிட்ட […]