சென்னை, டிச.20– உடன்குடி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக 1986–ம் ஆண்டில் காற்றாலை மூலமாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் சுமார் 11,000 மெகா வாட் […]