கோபி, பிப். 14– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் பெயரை, பொதுக் கூட்டத்தில் பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இதற்கு விளக்கம் கொடுத்த செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அந்த விழாவில் வைக்காததால் கலந்துகொள்ளவில்லை என்றும், இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் தாம் என்றும், தன்னை யாரும் […]