செய்திகள்

எடப்பாடிக்கு நயினார் நாகேந்திரன், பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, மே 12– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முன்னாள் முதல்வரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி க்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு ஓமலூர், மே 8– தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 100 நாள் வேலை திட்டம் மற்றும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதியை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினாரல். சேலம் மாவட்டம் ஓமலூரில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்காக சேவை செய்கின்ற கட்சி, […]

Loading

செய்திகள்

இன்று வணிகர் தினம் : தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு

சென்னை, மே 5– இன்று வணிகர் தினம். இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்துக்கடை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடை மட்டும் திறக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை, ஜவுளி மற்றும் நகைக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழகம் முழுவதும் மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியும்வெறிச்சோடி காணப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் ஆண்டு தோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. […]

Loading

செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை, ஏப்.14-– முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் காலமானார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-– அண்ணா தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி முன்னாள் செயலாளரும், ஆரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் உடல்நல குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கட்சியின் மீது விசுவாசம் கொண்டிருந்த ஜெய்சன் ஜேக்கபை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தி

சென்னை, மார்ச். 29– நாளை (30ந் தேதி) யுகாதி திருநாள். இதை முன்னிட்டு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ‘யுகாதி’ என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்

புதுடெல்லி, மார்ச் 25- அதிமுக பொதுச்செயலாளர் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி  பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட சென்றுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்திருந்தது. தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் […]

Loading

செய்திகள்

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய மர்ம கும்பல்

எடப்பாடி பழனிசாமி, வைகோ, அண்ணாமலை கண்டனம் சென்னை, மார்ச்.25-– யூ–டியூபர் சவுக்கு சங்கரின் வீட்டை சூறையாடிய மர்மகும்பலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி, வைகோ, அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். யூடியூபர் சவுக்கு சங்கர் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனது வயதான தாயாருடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இதற்கிடையே சவுக்கு சங்கர் வீட்டின் முன்பு திரண்ட மர்மகும்பல் பின்பக்க கதவை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தி சூறையாடினர். வீட்டுக்குள் கழிவுநீரையும் ஊற்றினார்கள். சவுக்கு சங்கரின் […]

Loading

செய்திகள்

காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதா?

தி.மு.க. அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் சென்னை, மார்ச் 12-– காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதா? என தி.மு.க. அரசிற்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– 2021–ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நிர்வாகத் திறமையற்ற ஆட்சியை நடத்தி […]

Loading

செய்திகள்

தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு: எடப்பாடி பழனிசாமி மனு வாபஸ்

சென்னை, மார்ச் 11– தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற மனுவை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார். தொகுதி மேம்பாட்டு நிதியை தயாநிதி மாறன் முறையாக செலவிடவில்லை மக்களவைத் தேர்தலின்போது பழனிசாமி பிரச்சாரம் செய்தார். எடப்பாடி பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். உண்மைக்கு மாறாகவும், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியதாக வழக்கு தொடர்ந்தார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் […]

Loading

செய்திகள்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி

சேலம், பிப். 28– தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பங்கேற்கும் என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து அடுத்த மாதம் மார்ச் 5-ந் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அண்ணா தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் […]

Loading