செய்திகள்

தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பாதிப்பு.. சுகாதாரத் துறை எச்சரிக்கை!

சென்னை, ஜன. 2– சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது, இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. தற்போது ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய் பரவி வருவதால் இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், […]

Loading

செய்திகள்

தனியார் வங்கிகளில் பணி விலகல் 25 சதவீதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

புதுடெல்லி, டிச. 30– தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வங்கி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தனியார் துறை வங்கிகள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, பணி விலகுவது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம்: ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை திருவண்ணாமலை, டிச. 3– திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மண் […]

Loading

செய்திகள்

கனமழை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை, அக்.17– கனமழை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலமானது நேற்று (16–ந்தேதி) இரவு 8 மணிக்கு தொடங்கி இன்று (17–ந்தேதி) மாலை 5.38 வரை நடைபெறுகிறது. இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 16, 17-ந் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்தும், புரட்டாசி மாத பவுர்ணமி தினமான நேற்று […]

Loading

செய்திகள்

கர்நாடக பேக்கரிகளில் உள்ள கேக்குகளில் புற்றுநோய் உண்டாக்கும் கெமிக்கல்கள்

கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை பெங்களூரு, அக்.5– கர்நாடகாவில் உள்ள சில பேக்கரிகளில் விற்கும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் சில கெமிக்கல்கள் இருப்பதாகக் கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், பானி பூரி, கேபாப் உள்ளிட்ட ஸ்ட்ரீட் புட்களில் கார்சினோஜென்ஸ் எனப்படும் ஆபத்தான கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இப்போது கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை பேக்கரியில் விற்கப்படும் கேக் குறித்தும் கவலை எழுப்பியுள்ளது. ரெட் […]

Loading

செய்திகள்

ஆயுதங்களைக் கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

புதுடெல்லி, செப். 20 நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பொது நீரோட்டத்தில் இணைய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இல்லாவிட்டால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை புதுடெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:– “வன்முறையைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு நக்சல்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். எனது இந்த வேண்டுகோளுக்கு நக்சல்கள் செவிசாய்க்கவில்லை என்றால், விரைவில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

27 நாடுகளில் கொரோனாவின் புதிய எக்ஸ்இசி வைரஸ் பரவல்

பெர்லின், செப். 19– உருமாற்றம் அடைந்த ‘XEC’ எனும் புதிய கொரோனா வைரஸ் தற்போது 27 நாடுகளில் வேகமாக பரவி வருவது குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் புதிய வகையான ‘எக்ஸ்இசி’ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் இந்த புதிய வகை தொற்று […]

Loading

செய்திகள்

வருவாய்த்துறை முதன்மைச்செயலாளர் அமுதா பேட்டி

சென்னை, செப்.19- வடகிழக்கு பருவமழையின்போது கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் குறித்து செயலி மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை முதன்மைச்செயலாளர் அமுதா கூறினார். மாறிவரும் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது அதிகனமழை பொழிவதால் பேரழிவு ஏற்படுகிறது. இயற்கை பேரிடரின்போது தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, மாநில போலீஸ் […]

Loading