எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு திருவண்ணாமலை, டிச.7- தென்பெண்ணை ஆற்றில் பாலம் தரமாக கட்டாததால் தான் அந்த பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூ.15 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயலால் பெய்த பலத்த மழை மற்றும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு […]